தொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்

தொகுதிவளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் , தொழுநோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் பாஜக எம்.பி.க்கள் பங்கேற்கவேண்டும் என்று மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தில்லியில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் அதிகளவிலான முதல்முறை எம்.பி.க்கள் பங்கேற்றனர். அவர்களிடம் மோடி கேட்டுக்கொண்டதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி கூறியதாவது:

நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் வருகை தராமல் இருப்பதற்கு கண்டனம்தெரிவித்த மோடி, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போது அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்கவேண்டும்; மக்களின் பிரதிநிதியாக நமது கடமையை நாம் சரியாக செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

அவர் மேலும் பேசுகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் கலந்துகொள்வது மட்டும் எம்.பி.க்களின் பணி அல்ல. தொகுதிவளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். குறிப்பாக, முதல்முறை எம்.பி. க்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கவேண்டும். ஒருவர் மீது முதல்முறை ஏற்படும் அபிப்ராயம் நல்லதாக இருக்க வேண்டும். ஏனெனில், அந்த அபிப்ராயம் கடைசியாகவும் இருக்கலாம். அதனால் அனைத்து எம்பி.க்களும் ஆர்வத்துடன் செயல்படவேண்டும். அதேபோல், யாரேனும் தனது கடமையை செய்யதவறினால் அவர்கள் குறித்து எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று மோடி அறிவுறுத்தினார்.

தொழு நோய், காச நோய் ஆகியவற்றை முழுமையாக ஒழிப்பதற்கு எம்.பி.க்கள் முயற்சி செய்யவேண்டும். 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை  முழுமையாக ஒழிக்கவேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக எம்பி.க்கள் பணியாற்ற வேண்டும்.

மனித உணர்வு களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விவகாரங்கள் மற்றும் சமூக  பிரச்னைகளுக்கு தீர்வுகாண எம்.பி.க்கள் முயற்சி செய்ய வேண்டும். உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, தொகுதிவளர்ச்சிக்கு தேவையானதை நிறைவேற்ற வேண்டும் என்று எம்பி.க்களுக்கு மோடி அறிவுரை வழங்கினார் என அமைச்சர் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளு மன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளின் போது மத்திய அமைச்சர்கள் தவறாது பங்கேற்கவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி, அவைக்குவராது விடுப்பு எடுக்கும் அமைச்சர்களின் பெயர்பட்டியல் அதேநாளில் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  மத்திய அமைச்சர்கள் அவைக்கு தொடர்ந்து வருவதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், அமைச்சர்களுக்கு மோடி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...