பயங்கரவாதத்தை வேருடன் அழிக்கும் வகையிலேயே சட்டத்திருத்தம்

பயங்கரவாத தடுப்பு தொடர்பான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. இச்சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள திருத்தங்கள் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

ஏனெனில், பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன என்ற சந்தேகம் ஏற்பட்டால், மாநில போலீஸாரின் அனுமதியின்றி எந்தமாநிலத்துக்கும் சென்று நடவடிக்கை எடுக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) இந்த சட்டத்திருத்தம் அதிகாரம் வழங்குகிறது.
சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புதெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, குரல்வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதத்தை வேருடன் அழிக்கும் வகையிலேயே இந்தச் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்தச் சட்டம் எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது. வாக்குவங்கி அரசியலுக்காக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம். ஆனால், மத்தியஅரசு தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது.
முன்பு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் இந்தமசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.  இப்போது பாஜக கூட்டணி ஆட்சியில் செய்யப்படும் திருத்தங்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தான் சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, இச்சட்டம் மூலம் எதிர்க் கட்சிகள் பழிவாங்கப்பட்டன. கொள்கை என்ற பெயரில் சிலர் நகர்ப்புறங்களில் நக்ஸல் தீவிரவாதத்தை தூண்டிவருகின்றனர்; அவர்கள் மீது அரசு எவ்வித கருணையும் காட்டாது. பாஜக ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாதபோதும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம்காட்டி வந்துள்ளது என்றார்.
இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த திருத்தங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...