அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றுவருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜாவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்யநாயுடு, அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது; அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும், பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆந்திராவுக்கு வாஜ்பாயின் வருகையை சுவரில் எழுதியவன் வாஜ்பாயின் அருகில் கட்சித் தலைவராக அமர்ந்தேன். சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பிறகு உலகநாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றன. குடியரசு துணைத்தலைவர் ஆக வேண்டும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை.

குடியரசு துணைத் தலைவராக என்னை தேர்ந்தெடுத்த போது நான் கண்ணீர் விட்டேன். மத்திய அமைச்சர் பதவியை இழந்ததால் நான் கண்ணீர் விடவில்லை. விவசாயியின் மகனான நான் நாட்டின் உயர்ந்த பதவியில் அமர்வதை எண்ணி கண்ணீர் விட்டேன். குடியரசு துணைத்தலைவர் ஆனதால் இனிமேல் பாஜக கட்சி அலுவத்திற்கு செல்ல முடியாது என வருந்தினேன். குடியரசு துணைத்தலைவர் பதவியில் அமர்ந்ததும் கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து விலகினேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...