அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றுவருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜாவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்யநாயுடு, அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது; அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும், பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆந்திராவுக்கு வாஜ்பாயின் வருகையை சுவரில் எழுதியவன் வாஜ்பாயின் அருகில் கட்சித் தலைவராக அமர்ந்தேன். சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பிறகு உலகநாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றன. குடியரசு துணைத்தலைவர் ஆக வேண்டும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை.

குடியரசு துணைத் தலைவராக என்னை தேர்ந்தெடுத்த போது நான் கண்ணீர் விட்டேன். மத்திய அமைச்சர் பதவியை இழந்ததால் நான் கண்ணீர் விடவில்லை. விவசாயியின் மகனான நான் நாட்டின் உயர்ந்த பதவியில் அமர்வதை எண்ணி கண்ணீர் விட்டேன். குடியரசு துணைத்தலைவர் ஆனதால் இனிமேல் பாஜக கட்சி அலுவத்திற்கு செல்ல முடியாது என வருந்தினேன். குடியரசு துணைத்தலைவர் பதவியில் அமர்ந்ததும் கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து விலகினேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...