அயோத்தி ராமர்கோயில் பிரச்னையில் இஸ்லாமிய சமூகத் தலைவர்களுடன் பேசி, நடுநிலையோடு தீர்வு காண முயற்சி மேற்கொண்டவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறினார்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 85 -ஆவது ஜயந்திஉத்ஸவம், மன்னார்குடியை அடுத்துள்ள இருள் நீக்கி கிராமத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றது.
நிறைவுநாளான வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் இல. கணேசன் பேசியது:
பாரத நாடு தோன்றியபோதே நாகரிகத்துடன் தோன்றியது. துறவிகள் வீதிக்குவரலாமா, மடத்திலேயே அமர்ந்து ஆசிர்வாதம் மட்டும் செய்யவேண்டும் என விமர்சனங்கள் எழுந்தபோதெல்லாம் அதைப்பற்றி கவலைப்படாமல், இந்து மதத்துக்கு வந்த பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றிகண்டவர் ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள்.
ஆதிதிராவிடர்கள், மீனவர்களிடம் அன்புகாட்டி அவர்கள் வசிக்கும் இடத்துக்கேசென்று அருளாசி நல்கியவர். அவரது பலகனவுகளை பாரத பிரதமர் மோடி தற்போது நிறைவேற்றி வருகிறார். அயோத்தி ராமர்கோயில் பிரச்னையில் இஸ்லாமிய சமூகத் தலைவர்களுடன் பேசி நடுநிலையோடு தீர்வு காண முயற்சி செய்தவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றார் அவர்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |