720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி

*720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலித்து மோசடி !! தமிழககாங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரிக்கு இந்திய கப்பல் துறை நோட்டீஸ் !….*

*தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்தும் கல்லூரியில், மாணவர்களிடம் முறைகேடாக பலகோடி ரூபாய் வசூலித்த விவகாரம் தொடர்பாக விளக்கம்கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.*

*தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசரை மாற்றி விட்டு, அவருக்கு பதிலாக கேஎஸ்.அழகிரி கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப் பட்டார். இந்நிலையில், தற்போது மோசடி புகார் ஒன்றில் கேஎஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கி உள்ளனர்.*

*கே.எஸ்.அழகிரி தனது சொந்தமாவட்டமான சிதம்பரத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் பெயரில் கல்லூரி ஒன்றை நடத்திவருகிறார். இந்த கல்லூரியின் உரிமையாளர்களாக அவரது மனைவி, மகள்கள் என குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்தகல்லூரியில் கப்பல் தொழில்நுட்ப சார்ந்த பல்வேறு படிப்புகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.*

*கப்பல் தொழில் நுட்பம் தொடர்பாக 6 மாதகால பயிற்சி அளிக்க 720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலிக்கப்பட்டு, மேலும் பயிற்சிமுடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கல்லூரி ஏற்படுத்தி தரும் எனவும் அறிவித்திருந்தது. அதில் ஒரு நாள் மட்டுமே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.*

*பயிற்சி அளிக்காமல் ஏமாற்றிவந்த கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் சார்பில் பல முறை முறையிட்டும், கல்லூரி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை.மேலும் மாணவர்கள் பயிற்சிமுடித்தாக சான்றிதழ் வழங்கி கல்லூரி நிர்வாகம் மோசடி செய்துள்ளது.*

*இந்தவிவகாரம் தொடர்பாக அகில இந்திய கப்பல்துறை இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களிடம் மோசடிசெய்த விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்கம்கேட்டு இந்திய கப்பல் துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.*

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...