உலகளாவிய கடல் சார் துறையின் இந்தியாவின் லட்சிய நோக்கு

உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு – 2024-ன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரும், கூடுதல் செயலாளருமான திரு ஷியாம் ஜெகந்நாதன் பங்கேற்று பேசினார். கடல்சார் துறையில் உலக அளவில் முன்னணி நாடாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய கப்பல் மறுசுழற்சி சந்தையில் 20 சதவீத  பங்கை அடைவதற்கான இலக்குடன் இந்தியா செயல்படுவதாக கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் கப்பல் கட்டுவதில் 5-வது இடத்திற்கு முன்னேறுவதையும் இந்தியா இலக்காக கொண்டுள்ளது  என்று அவர் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்து என்பது உலகளாவிய சரக்கு போக்குவரத்திலும், விநியோகச் சங்கிலியிலும் உயிர்நாடி என்று அவர் கூறினார். கப்பல் துறை ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது எனவும் இந்த மாற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். புவிசார் அரசியல் சூழல், மோதல்கள், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப மாற்றங்கள், மாற்று எரிபொருட்களுக்கான தேடல் போன்ற முக்கிய சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். இத்துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய இவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

தொழில்நுட்ப முன்னேற்றங்களில் மனித அம்சங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜெகந்நாதன், இந்த சவால்களை வெற்றிகரமாக வழிநடத்த கடல்சார் தொழில்துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய கப்பல் போக்குவரத்துப் பதிவேட்டின் செயல் தலைவர் அருண் சர்மா பேசுகையில், கடந்த 160 ஆண்டுகளில் கப்பல் தொழில் இரண்டு பெரிய  சுழற்சிகளுக்கு உட்பட்டுள்ளது என்றும், இப்போது, மூன்றாவது பெரிய மாற்றத்திற்கான சுழற்சியில் உள்ளது என்றும் தெரிவித்தார். கார்பன் வெளியேற்றத்தைக்  குறைப்பதை நோக்கி தற்போதைய பயணம் நகர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடல்சார் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால முன்னேற்றங்களையும், சவால்களையும் பற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நாள் மாநாட்டின் தொடக்க விழாவில் கடல்சார் தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...