உலகளாவிய கடல் சார் துறையின் இந்தியாவின் லட்சிய நோக்கு

உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு – 2024-ன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரும், கூடுதல் செயலாளருமான திரு ஷியாம் ஜெகந்நாதன் பங்கேற்று பேசினார். கடல்சார் துறையில் உலக அளவில் முன்னணி நாடாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய கப்பல் மறுசுழற்சி சந்தையில் 20 சதவீத  பங்கை அடைவதற்கான இலக்குடன் இந்தியா செயல்படுவதாக கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் கப்பல் கட்டுவதில் 5-வது இடத்திற்கு முன்னேறுவதையும் இந்தியா இலக்காக கொண்டுள்ளது  என்று அவர் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்து என்பது உலகளாவிய சரக்கு போக்குவரத்திலும், விநியோகச் சங்கிலியிலும் உயிர்நாடி என்று அவர் கூறினார். கப்பல் துறை ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது எனவும் இந்த மாற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். புவிசார் அரசியல் சூழல், மோதல்கள், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப மாற்றங்கள், மாற்று எரிபொருட்களுக்கான தேடல் போன்ற முக்கிய சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். இத்துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய இவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

தொழில்நுட்ப முன்னேற்றங்களில் மனித அம்சங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜெகந்நாதன், இந்த சவால்களை வெற்றிகரமாக வழிநடத்த கடல்சார் தொழில்துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய கப்பல் போக்குவரத்துப் பதிவேட்டின் செயல் தலைவர் அருண் சர்மா பேசுகையில், கடந்த 160 ஆண்டுகளில் கப்பல் தொழில் இரண்டு பெரிய  சுழற்சிகளுக்கு உட்பட்டுள்ளது என்றும், இப்போது, மூன்றாவது பெரிய மாற்றத்திற்கான சுழற்சியில் உள்ளது என்றும் தெரிவித்தார். கார்பன் வெளியேற்றத்தைக்  குறைப்பதை நோக்கி தற்போதைய பயணம் நகர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடல்சார் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால முன்னேற்றங்களையும், சவால்களையும் பற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நாள் மாநாட்டின் தொடக்க விழாவில் கடல்சார் தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...