உலகளாவிய கடல் சார் துறையின் இந்தியாவின் லட்சிய நோக்கு

உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு – 2024-ன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரும், கூடுதல் செயலாளருமான திரு ஷியாம் ஜெகந்நாதன் பங்கேற்று பேசினார். கடல்சார் துறையில் உலக அளவில் முன்னணி நாடாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய கப்பல் மறுசுழற்சி சந்தையில் 20 சதவீத  பங்கை அடைவதற்கான இலக்குடன் இந்தியா செயல்படுவதாக கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் கப்பல் கட்டுவதில் 5-வது இடத்திற்கு முன்னேறுவதையும் இந்தியா இலக்காக கொண்டுள்ளது  என்று அவர் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்து என்பது உலகளாவிய சரக்கு போக்குவரத்திலும், விநியோகச் சங்கிலியிலும் உயிர்நாடி என்று அவர் கூறினார். கப்பல் துறை ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது எனவும் இந்த மாற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். புவிசார் அரசியல் சூழல், மோதல்கள், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப மாற்றங்கள், மாற்று எரிபொருட்களுக்கான தேடல் போன்ற முக்கிய சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். இத்துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய இவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

தொழில்நுட்ப முன்னேற்றங்களில் மனித அம்சங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜெகந்நாதன், இந்த சவால்களை வெற்றிகரமாக வழிநடத்த கடல்சார் தொழில்துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய கப்பல் போக்குவரத்துப் பதிவேட்டின் செயல் தலைவர் அருண் சர்மா பேசுகையில், கடந்த 160 ஆண்டுகளில் கப்பல் தொழில் இரண்டு பெரிய  சுழற்சிகளுக்கு உட்பட்டுள்ளது என்றும், இப்போது, மூன்றாவது பெரிய மாற்றத்திற்கான சுழற்சியில் உள்ளது என்றும் தெரிவித்தார். கார்பன் வெளியேற்றத்தைக்  குறைப்பதை நோக்கி தற்போதைய பயணம் நகர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடல்சார் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால முன்னேற்றங்களையும், சவால்களையும் பற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நாள் மாநாட்டின் தொடக்க விழாவில் கடல்சார் தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...