பாஜக தேசிய செயலாளர் H.ராஜாவை தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சமீபத்தில் விமர்சித் திருந்தார்.
இந்நிலையில் வேல் முருகனுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாடும், உலகநாடுகளும் காஷ்மீரில் கொண்டு வரப்பட்டிருக்கும் மறுசீரமைப்பை ஆதரிக்கும் சூழ்நிலையில், பிரிவினையை தூண்டும்வகையில் வேல்முருகன் பேசியதையும் அண்ணன் H.ராஜா அவர்களைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.வேல்முருகன் தனது வார்த்தைகளைத் திரும்பப்பெறவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |