அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் சித்தர்கள் அறுகு என பெயரிட்டுள்ளனர்.

இடகலை, பிங்கலை நமது தச நாடிகளில் பிரதானமானது, அறுகம்புல் இவை இரண்டையும் மற்றும் இவை சார்ந்த 72000 நரம்புகளையும் இயக்கவல்லது.

அறுகம்புல்லின் ஊறல் நீரையும் , பாளையும் சேர்த்து உட்கொள்ள  கண் புகைச்சல், கண்நோய், குருதியழல், தலை நோய்  இவை நீங்கும் .

அறுகம்புல்லுடன் சிறிது அலவு மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வந்தால் , படர்தாமரை சொறி,சிரஙகு நுண்புழு ஒழியும்.

அறுகம்கட்டை  கணு நீக்கி ஒரு பிடியெடுத்து அதனுடன் பதிமுன்று  மிளகு சேர்த்து இடித்து அரைப்படி நீர்விட்டு அரை அழக்காக சுண்டும் படி கஷாயம் இட்டு சாப்பிடவும். இப்படி காலை, மாலை இரண்டு வேளையும் பாத்து நாள் சாப்பிட்டால் மேகசுரம் , உடம்பு சூடு முதலியன நீங்கும்.

மாட்டு சாணியை உருண்டையா பிடித்து அதற்கு பொட்டு வைத்து அதன் தலையில்  அருகம்புல்லைச்செருகி வைத்தால் சில நாள் சென்று சாணி  சுக்கலாக காய்ந்து இருக்கும். இதற்கு காரணம்  அறுகம்புல்லின் வேர் பாகத்தில் இருக்கும் கிருமி நாசிணி சாணியில் இருக்கும் அசுத்த கிருமிகளை வேதியல் மாற்றத்தால் நீக்கி சுத்தப்படுத்துகிறது

இதையே மற்றொரு சாணியில் அறுகம்புல் செருகாமல் வைத்தால் அவற்றில் புழுபுழுத்து உதிர்ந்து காணப்படும். இவற்றில் இருந்து அறுகம்புல்லுக்கு எந்த அளவிற்கு மருத்துவ குணம் உண்டு என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

அறுகம்புல்லின் கணு பாகம் நச்சு தன்மையுடையது எனவே இதை நீக்கிப் பயன படுத்த வேண்டும் என்பது மருத்துவ விதியாகும்.

 

Tag; arugampul medicinal  அறுகம்கட்டை  அறுகம்புல்  அறுகம்புல் இராஜ மூலிகையாகும்  அறுகம்புல் நோய்களை வேருடன்  அறுகம்புல்லின்  அறுகம்புல்லின் ஊறல் அறுகம்கட்டை  அறுப்பதால்  கண்நோய்  குருதியழல்  தலை நோய்· இவை நீங்கும்  நீரையும் கண் புகைச்சல்  நோய்களை வேருடன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...