கல்விக்குச் சமமாக உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்

கல்விக்குச் சமமான அளவில் உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த முழுமையான கல்வியளிப்பது அவசியமாகும். தேசவளர்ச்சியை கட்டமைப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் குழந்தைகளிடம் ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, மதச் சார்பின்மை, மற்றவர்களின் நலன், மனித கண்ணியம், மனித உரிமைகளை மதிப்பது ஆகிய மதிப்பீடுகளை வளர்த்தெடுக்க வேண்டும். சிறந்த ஆசிரியர்களாக நடந்து கொள்வது தான் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாதிருஷ்ணனுக்கு புகழஞ்சலி செலுத்தும் வழியாகும்.

பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளிடம் கலந்துரையாடும்போது, குழந்தைகளின் பலம், பலவீனம், மனம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்மிக்க வரலாறு, செறிந்த பாரம்பரியம், மரபுகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவது அவசியம். நீடித்தவளர்ச்சி, இயற்கையுடன் வாழ்தல் ஆகிய கருத்தாக்கத்தையும் போதனையில் இடம் பெறச் செய்யவேண்டும். கல்விக்குச் சமமாக உடற்கல்வியையும் ஊக்குவிப்பது அவசியமாகும்.

விளையாட்டுகளிலும், யோகாவிலும் மாணவர்கள் ஈடுபட ஊக்குவிக்கவேண்டும். வீடுகளில் குழந்தைகள் தங்களது தாய்மொழியில் பேசுவதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும். ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதேவேளையில், இயன்ற வரையில் பல மொழிகளைப் பயிலவேண்டும். புதிய மொழிகளைப் பயில்வதில் தயக்கம் கூடாது. எந்த மொழியையும் திணிக்கக்கூடாது; எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது. கல்வித் தளத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர அர்ப்பணிப்பு, நம்பிக்கை, தகுதியுடன்கூடிய ஆசிரியர்கள் நாட்டின் தேவையாக உள்ளது. தங்களது அறிவு, மனப்பான்மை, நடத்தை மூலம் அதிர்வுமிக்க தேசத்தின் அடித்தளத்தை உருவாக்கும் தனித்துவ மிக்க வாய்ப்பு ஆசிரியர்களிடம் உள்ளது .

குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...