காஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை வல்லபபாய் படேலிடம் ஒப்படைத்திருந்தால் அவர் அதை அப்போதே வேறு மாதிரியாக கையாண்டிருப்பார்.படேல்போன்றே நேருவும் தேசபக்தர்தான், நல்ல மனிதர்தான். ஆனால், நாட்டை ஆளும் தலைவர் நல்லவராக இருந்தாலும் வல்லவராக இல்லா விட்டால் அந்த நாட்டுக்குப் பிரச்னைகள் தான் வரும் என்பதற்கு ஜம்மு-காஷ்மீர் நல்ல உதாரணம்.

படேலின் புத்திசாலித்தனத் தாலேயே 370-ஆவது சட்ட பிரிவில் “தற்காலிகமானது’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அவர் சேர்த்த அந்தவார்த்தைதான் இப்போது நமக்கு உதவியுள்ளது.

சிறப்பு அந்தஸ்தை நீக்கும் விஷயத்தில் நரேந்திர மோடி அரசு புத்திசாலித் தனத்துடன் செயல்பட்டுள்ளது. இப்படி ஒரு விஷயத்தைச் செய்யவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான், யாரும் எதிர்பார்க்காத வகையில் 2015-இல் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அவர்களுடன் கூட்டணியில் இருந்த போது இதற்காக தனக்குத் தேவையான விஷயங்களைத் தெரிந்துகொண்டது. எதற்காக பாஜக தன்னுடன் கூட்டணி அமைத்தது என்பதை மெஹபூபா முஃப்தி தெரிந்து கொள்ளும் முன்னதாக, அந்தக் கூட்டணியில் இருந்து விலகி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.

இதற்கிடையே, கடந்த 2009 முதல் அந்த மாநிலத்தில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் குறைந்து வருவதையும், உள்ளாட்சித்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததையும் கணக்கில் கொண்டது பாஜக.

இதற்கிடையேதான் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 2016-இல் 3,415 ஆக இருந்த கல்லெறி சம்பவங்கள், 2017-இல் வெறும் 51 ஆக குறைந்தன. பயங்கரவாத செயல்களின் எண்ணிக்கையும் வெகுவாககுறைந்தது. சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் ஏதாவது பிரச்னை வருமா என்பதை அறிந்து கொள்வதற்காகவே, அதற்கும் முன்னதாக முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பிறகு, அந்த மாநிலத்தில் இருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வளவும் செய்த பிறகே அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடத்தப்பட்டது.

காஷ்மீரின் நிலைமை வரும்நாள்களில் இயல்பாக இருக்கும். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சேமிப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும்

எஸ்.குருமூர்த்தி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...