பில்கேட்ஸ் அறக்கட்டளையின் விருதை பெற்றார் மோடி

தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அளித்த சிறப்பான பங்களிப்புக்காக, பில் மற்றும் மெலிண்டாகேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு “குளோபல் கோல்கீப்பர்’ விருது செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.

ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப் பட்டுள்ள “நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு’களை அடைவதற்கான முயற்சிகளை தங்கள் நாட்டிலோ அல்லது பல்வேறு நாடுகளிலோ வெற்றிகரமாகச் செயல் படுத்தும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு “குளோபல் கோல்கீப்பர்’ விருதை பில் மற்றும் மெலிண்டா அறக் கட்டளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், “தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் நாட்டுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த இலக்கை அடைவதற்கு பிரதமர் மோடி வழங்கிய பங்களிப்புக்காக, இந்த ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விருதுவழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அறக்கட்டளை இணை நிறுவனர் பில் கேட்ஸிடமிருந்து “குளோபல் கோல்கீப்பர்’ விருதைப் பெற்று, பிரதமர் மோடி பேசியதாவது:

மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினத்தில் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்குமட்டும் கிடைத்த விருது அல்ல; நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்தவிருது. “தூய்மை இந்தியா’ திட்டத்தின் வெற்றி மிகச் சிறப்பானது. இத்திட்டமானது, நாட்டிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள “நீடித்தவளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கும் உதவியது.

சமர்ப்பணம்: “தூய்மை இந்தியா’ திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய வர்களுக்கும், அன்றாடப் பணிகளில் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் களுக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...