நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிவடைந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக தனதுகூட்டணி கட்சிகளிடம் ஆதரவுகோரி வருகிறது.
சில நாட்களுக்கு முன் அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜய காந்தை நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினர். ஆனால் முக்கிய கூட்டணி கட்சியான பாஜகவிடம் ஆதரவு கோராமல் இருந்தது. முன்னதாக, இருகட்சிகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில்,
பாஜக உடனான கூட்டணி தொடர்வதாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும், அதிமுக உடனான கூட்டணி தொடர்வதாக வானதி ஸ்ரீனிவாசனும் தெரிவித்து வந்தநிலையில், இன்று பாஜக அலுவலகம் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து இடைத் தேர்தலுக்கு ஆதரவுகோரினார்.
இச்சந்திப்பிற்கு பின், நிருபர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “தமிழக பாஜ.,விற்கு தலைவர் இல்லாததால் மேலிடதலைமையிடம் அதிமுக ஆதரவு கோரியது. மேலும், அமைச்சர் ஜெயக்குமார் சற்றுமுன் என்னை சந்தித்து ஆதரவுகோரினார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது.
அதிமுக வெற்றிக்காக பாஜக ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாடுபடுவர். பிரசாரம் மேற்கொள்ளும் நிர்வாகிகள் பட்டியல் விரைவில்முறைப்படி வெளியிடப்படும். இரு தொகுதிகளிலும் திமுக, காங்., கட்சியை தோற்கடிக்க அ.தி.மு.க.,வுடன் இணைந்து பாஜ செயல்படும். அதிமுக, பாஜக சார்பில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதங்கள் எழுந்தன” என்று கூறியுள்ளார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |