50 சதவீத அதிகாரப்பகிர்வை பாஜக ஒருபோதும் ஏற்கவில்லை:

மகாராஷ்டிர மாநில சட்ட மன்றத் தொகுதி பங்கீடுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினருடன் மும்பையில் பேச்சு வார்த்தை நடத்திய பொழுது 50 சதவீத அதிகாரப்பங்கீடு திட்டத்தை சிவசேனை முன்வைத்தது உண்மைதான். ஆனால் அந்ததிட்டத்தை பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

செய்தியாளர்கள் இன்று மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸை சந்தித்து பேசினார்கள். அப்பொழுது சிவசேனை கட்சி 50 சதவீத அதிகாரப் பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனை முதல்வர், அமைச்சரவையில் சரி பாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனை முன்வைத்துள்ளது. இந்த திட்டத்தை பாஜக ஏற்கனவே ஏற்றுக் கொண்டதாகவும் கூறுகிறது.

இதுபற்றி உங்கள் விளக்கம் என்ன என்று செய்தி யாளர்கள் கேட்டனர்.

தேர்தலுக்கு முன்பே 50 சதவீத  அதிகார பங்கீடு என்ற திட்டத்தை சிவசேனை முன் வைத்தது உண்மைதான். ஆனால் சிவசேனை முன்வைத்த அந்தத்திட்டத்தை பாரதீய ஜனதா ஒருபோதும் ஏற்றுக் கொள்ள வில்லை என பட்னாவிஸ் தெளிவுபடுத்தினார்.

இப்படி தேக்கநிலையில் பெரும்பான்மை கூட்டணி கட்சிகள் இரண்டும்  இருந்தால் மந்திரிசபை அமைப்பதற்கான முயற்சிகள் எப்படி வெற்றி பெறும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, ”பாரதீய ஜனதா கட்சியிடம் மாற்றுத் திட்டங்கள் பல இருக்கின்றன என்று பட்னாவிஸ் குறிப்பிட்டார்.

அந்த மாற்றுத் திட்டங்கள் பற்றி அவர் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.

சென்ற அமைச் சரவையில்  25  கேபினட் இடங்களில் 6 இடங்கள் சிவசேனைவசம் இருந்தன. துணை அமைச்சர் களுக்கான 18 இடங்களில் 7 சிவசேனை அமைச்சர்கள்வசம் இருந்தன.

இப்பொழுது சில இடங்களை கூடுதலாக சிவசேனைக்கு ஒதுக்கினால் அவர்கள் சம்மதிக்ககூடும். ஆனால் அவர்களின் சம்மதத்தைப் பெறுவது மிகவும் கடினமான விஷயம். இறுதியில் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சரவையில் செயல்படுவார்கள் என பெயர் கூற விரும்பாத பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...