ஹிந்தி திணிப்பு கையில் எடுத்த முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு

‘மும்மொழி கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்ததால், ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் ‘ என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராகவும், ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் கூறி, மத்திய அரசை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மும்மொழி கல்விக் கொள்கையின் மீது அச்சுறுத்தல் போன்ற மாயையை பரப்புவதை முதல்வர் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமச்சீரற்ற கல்வி முறையை தடுப்பதற்காக, பா.ஜ.,வினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக நாம் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளனர்.

எத்தனையோ தடைகள் இருந்த போதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜ., கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடுவீடாகச் சென்று மும்மொழி கல்விக் கொள்கை குறித்து பிரசாரம் செய்து வருகின்றனர். மும்மொழி கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்ததால், ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

உங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கூட தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படவில்லை. மாறாக எந்த மொழி விருப்பமோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம். மக்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது. இந்திய அரசியலமைப்பின் 16வது திருத்தமான, பிரிவினை எதிர்ப்பு மசோதா, உங்கள் கட்சியின் பிரிவினைவாத கருத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். இந்த மசோதா, இன்று நீங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சியின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், புதிய கல்விக்கொள்கையில் பெரும்பாலான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக உங்களின் பகுதிநேர கல்வித்துறை அமைச்சர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இன்று நீங்கள் புதிய கல்விக்கொள்கையை விஷம் என்று கூறுகிறீர்கள். உண்மையில், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரிகிறதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...