ஹிந்தி திணிப்பு கையில் எடுத்த முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு

‘மும்மொழி கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்ததால், ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் ‘ என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராகவும், ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் கூறி, மத்திய அரசை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மும்மொழி கல்விக் கொள்கையின் மீது அச்சுறுத்தல் போன்ற மாயையை பரப்புவதை முதல்வர் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமச்சீரற்ற கல்வி முறையை தடுப்பதற்காக, பா.ஜ.,வினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக நாம் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளனர்.

எத்தனையோ தடைகள் இருந்த போதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜ., கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடுவீடாகச் சென்று மும்மொழி கல்விக் கொள்கை குறித்து பிரசாரம் செய்து வருகின்றனர். மும்மொழி கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்ததால், ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

உங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கூட தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படவில்லை. மாறாக எந்த மொழி விருப்பமோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம். மக்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது. இந்திய அரசியலமைப்பின் 16வது திருத்தமான, பிரிவினை எதிர்ப்பு மசோதா, உங்கள் கட்சியின் பிரிவினைவாத கருத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். இந்த மசோதா, இன்று நீங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சியின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், புதிய கல்விக்கொள்கையில் பெரும்பாலான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக உங்களின் பகுதிநேர கல்வித்துறை அமைச்சர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இன்று நீங்கள் புதிய கல்விக்கொள்கையை விஷம் என்று கூறுகிறீர்கள். உண்மையில், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரிகிறதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...