டில்லிமக்கள், ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல், துடைப்பத்தை வைத்து விட்டனர் என பாஜ., மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் எம்.பி.,யும் பாஜ., மூத்த தலைவருமான இல.கணேசன், கூறியதாவது:
ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். டில்லி தேர்தல் முடிவுகள் பாஜக .,விற்கு பின்னடைவு இல்லை. கடந்ததேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கையில் கூடுதல் இடங்களில் பாஜ., வெற்றிபெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் ஆம்ஆத்மி, இலவசங்களை அள்ளிகொடுத்துள்ளது. ஆட்சி பீடத்தை ராஜ்யலட்சுமி என்பார்கள். அந்த பீடத்தில் டில்லி மக்கள் தாமரையை வைக்காமல், துடைப்பத்தை வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |