10 ஆண்டாக பேரழிவில் சிக்கியுள்ள டெல்லியை மீட்ப்போம் – பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகளாகவே தலைநகர் டில்லி மிகப் பெரிய பேரழிவில் சிக்கித் தவிக்கிறது. சமூக சேவகர் அன்னா ஹசாரேவை முன்னிறுத்தி சில மோசமான, நேர்மையற்றவர்கள், டில்லியை குழிக்குள் தள்ளி விட்டனர். டில்லி மாநகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால், டில்லி அரசு பொய் பிரசாரத்துடன் பள்ளிக் கல்வித் துறை முதல் அனைத்து துறைகளையும் நாசப்படுத்தி வைத்திருக்கிறது. டில்லி அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

டில்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் டில்லியைச் சூழ்ந்துள்ள பேரழவில் இருந்து காப்பாற்ற போர் துவக்கியுள்ளோம். டில்லி மக்கள் இந்தப் போருக்கு தோள் கொடுத்து, தேர்தலில் ஆம் ஆத்மியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்தப் புத்தாண்டில், தேசத்தை கட்டியெழுப்பும் மற்றும் மக்கள் நலன் சார்ந்த புதிய அரசியலை பா.ஜ., அறிமுகப்படுத்தும். எனவே, பேரழிவு சக்தியை அகற்றி, பா.ஜ.,வை ஆட்சி பீடத்தில் அமர வைக்க டில்லி மக்கள் முன்வர வேண்டும்.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ உள்ளிட்ட பல திட்டங்களை டில்லி அரசு செயல்படவில்லை. அதனால், டில்லி மக்களுக்கு மத்திய அரசால் முழுமையாக உதவ முடியவில்லை. டில்லி மாநகரில் தரமான நெடுஞ்சாலைகள் மற்றும் வீடுகள் அமைய காரணம், துணைநிலை கவர்னரின் நிர்வாகத்தில் இயங்கும் டில்லி மேம்பாட்டு ஆணையம்தான். பேரழிவு சக்தி இந்த ஆணையத்தின் செயல்பாட்டில் தலையிட முடியாது.

டில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தான் வசித்த அரசு பங்களாவில் கோடிக்கணக்கில் செலவழித்து அரண்மணை போல மாற்றியமைத்தார். ஆனால், ஏழைகளுக்கு உழைப்பதாக வெட்கமே இல்லாமல் ஆம் ஆத்மி பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்குகிறது.

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் வீடுகள் வழங்கு வேண்டும் என்பதே பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின் நோக்கம். அடுத்தகட்டமாக, நகர்ப்புற ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள் கட்டப்படும். அதேபோல, மத்தியதர வர்க்கத்தினர் சொந்தமாக வீடு வாங்க, வீட்டுக் கடன் வட்டியில் மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு, கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசு அளித்த நிதியில், பாதியைக் கூட செலவு செய்யவில்லை. இந்த ஆபத்துக்கு எதிராக போர் தொடுக்க டில்லிவாசிகள் முன்வர வேண்டும். இந்த ஆபத்தில் இருந்து, டில்லியை காப்பாற்ற டில்லியில் வசிக்கும் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்.

இங்குள்ளவர்ககளில், சிலருக்கு மானிய விலையிலான இந்த வீடுகள் கிடைக்காமல் இருக்கலாம். இன்று இல்லாவிட்டாலும், நிச்சயமாக அவர்களுக்கும் வீடு வழங்கப்படும். அசோக் விஹாருக்கு நான் இன்று வந்திருப்பதன் மூலம், எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன. இந்திரா காலத்தில் கொண்டு வரப்பட்ட, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில், நான் மட்டுமின்றி என்னைப்போன்ற எத்தனையோ பேர், நாடு முழுதும் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதே அசோக் விஹாரில்தான் நான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தேன்.

நம் நாடு இன்று, ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தர வீடு கிடைக்க வேண்டும் என்பதை நோக்கியே, பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். கனவு காணும் அந்த வளர்ந்த இந்தியாவில், ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடு கிடைக்கும். இது நிச்சயம் நடந்தே தீரும். இந்த மாபெரும் லட்சிய கனவை அடையும் முயற்சியில் டில்லிவாசிகளுக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.

குடிசைவாசிகளுக்கு நிரந்தரமான பாதுகாப்பான வீடு கட்டித்தர வேண்டும் என்பதை மத்திய அரசு பிரசாரமாகவே செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு நகரங்களும் தன்னுடைய முக்கியப் பங்கை செலுத்துகின்றனர். குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், மிகப்பெரிய கனவுகளுடன் நகரங்களுக்கு வருகின்றனர். அந்தக் கனவுகளை நிறைவேற்ற நேர்மையான வழிகளில் வாழ்க்கை நடத்துகின்றனர். எனவே, நகரங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும், மிக தரமான வீடு தர வேண்டும் என்பதில், மத்திய அரசு முனைப்புடன் இருக்கிறது.

அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மிகப்பெரிய பலத்துடன் இந்தியா திகழ்கிறது. சர்வதேச அளவில் நம் நாட்டின் சேவை 2025ம் ஆண்டில் மேலும் வலுப்பெறும். உலக அரங்கில் இந்தியா தனக்கான இடத்தை, மேலும் உறுதிப்படுத்தப் படுத்தும். உலக நாடுகளிலேயே மிகப் பெரிய உற்பத்தி திறன்கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்த ஆண்டில் மாறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...