அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை (24/02/2020) இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகைதருகிறார். அதிபர் ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் வருகிறார். பிப்.24 மற்றும் 25 ஆகிய இருநாட்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இடையேயான உயர்மட்ட பேச்சு வார்த்தையும் நடைபெறவுள்ளது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இருநாட்டு அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். தாஜ் மஹால், டெல்லி, அகமதா பாத் உள்ளிட்ட நகரங்களில் துணை ராணுவ படையினர், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதா பாத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் இந்தியவருகை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை அகமதாபாத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை ட்ரம்ப் தொடங்கிவைத்து எங்களுடன் இருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...