இறந்த 52 பேரையும் இந்தியர்களாகவே பார்க்கிறேன்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய திலிருந்தே டெல்லியில் நடந்தவன்முறை சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பிவந்தனர்.  இந்நிலையில், நேற்று கூடிய அவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வன்முறைச் சம்பவங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றியதாவது .

டெல்லியின் மற்ற பகுதிகளில் கலவரங்கள் பரவாமல் காவல்துறையினர் தடுத்தது பாராட்டுக்குரியது. வன்முறைச் சம்பவங்களை சுமார் 36 மணி நேரத்தில் காவலர்கள் கட்டுப்படுத்தியனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகைதந்தபோது எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்ளவில்லை. நாள் முழுவதும் காவல் துறையினருடன்தான் இருந்தேன். வன்முறைகள் தொடர்பாக 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது  2,600-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

`இந்து மற்றும் இஸ்லாமியன் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை’ இறந்த 52 பேரையும் இந்தியர்களாகவே பார்க்கிறேன். நாடாளுமன்றத்தை மதத்தின் அடிப்படையில் பிரிக்க முடியுமா என்ன? காங்கிரஸினர் ஆட்சியின் போது நடந்த கலவரங்களில்தான் 76 சதவிகிதம் இறந்தனர். பிப்ரவரி 25-க்குப் பிறகு கலவரங்கள் நடைபெற வில்லை. இந்தச்சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது”

`குடியுரிமை திருத்தச் சட்டமானது முறையான கலந்துரை யாடலுக்குப் பிறகே ஜனநாயக முறையில் நிறைவேற்ற பட்டது. குடியுரிமையை திரும்பப் பெறுவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. துன்புறுத்தபடும் மக்களுக்குக் குடியுரிமை வழங்கு வதற்கான விதிமுறைகள் உள்ளன. எனக்கு மத அடிப்படையிலான 25 சட்டங்கள் தெரியும். இஸ்லாமியத்திற்கான சட்டங்கள் தெரியும். எனவே, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்தச்சட்டம்தான் முதல் சட்டம் எனக் கூறுவது தவறு. இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணிகளைவிட ஆதரவு தெரிவித்து நடந்த பேரணிகளே அதிகம்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.