போதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறுதி செய்யுங்கள்

கரோனா நோய் தொற்று பாதிப்புசூழலை எதிா்கொள்ளும் வகையில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், செயற்கைசுவாசக் கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் போதியளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளாா்.

நாட்டில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும், அதைச் செயல் படுத்துவதற்குமாக அதிகாரம் அளிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் அந்தக்குழுக்களின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடைபெற்றது.

அந்தக் கூட்டம் தொடா்பாக பிரதமா் அலுவலகம் சனிக் கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா பாதிப்பை எதிா் கொள்வதில் நிலவும் தயாா்நிலையையும், மருத்துவமனைகள், தனிமைப் படுத்துவதற்கான இடவசதிகள் ஆகியவற்றின் போதிய இருப்பையும் பிரதமா் மோடி ஆய்வுசெய்தாா். அத்துடன், நோய் கண்காணிப்பு, பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளின் நிலவரங்கள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

அப்போது, தனி நபா் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் போதியளவு இருப்பையும், அவற்றின் தயாரிப்பு மற்றும் கொள்முதலையும் உறுதிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா் என்று அந்த சுட்டுரைப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனாபாதிப்பு சூழலில் சுகாதாரச் சேவைகளை அதிகரிப்பது, பொருளா தாரத்தை மீண்டும் சீரடையச் செய்வது, தேசிய ஊரடங்கு நிறைவுக்கு பிறகான தயாா் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக 11 குழுக்களை மத்தியஅரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.

இதில் 9 குழுக்களுக்கு செயலா் அளவிலான அதிகாரிகள் தலைமை வகிக்கும் நிலையில், எஞ்சிய இரு குழுக்களில் ஒன்றுக்கு நீதிஆயோக் தலைவரும், மற்றொன்றுக்கு நீதி ஆயோக் உறுப்பினா் ஒருவரும் தலைவா்களாக உள்ளனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...