இது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது

இது ஒரு நீண்ட காலப்போர். எனவே நாம் சோர்ந்து விடக் கூடாது. கண்டிப்பாக வெற்றிபெற்றே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

பாஜக துவங்கப்பட்ட 40வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் மத்தியில் வீடியோ மூலமாக இன்று உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறியது:

இந்தவருடம் ஒரு இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. நமக்கு மட்டுமல்ல, மொத்த உலகுமே, அச்சுறுத்தலான காலகட்டத்தில் உள்ளது.

இந்ததொற்று நோய் தொடர்பான அபாயத்தை முதலில் நன்கு அறிந்துகொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களின் உதவிகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துரிதகதியில் எடுக்கப்படுகிறது. நமது தடுப்பு நடவடிக்கையை, உலகசுகாதார நிறுவனமும்கூட பாராட்டியுள்ளது.

நாட்டுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். சுய ஊரடங்கு காலகட்டமாக இருக்கட்டும், இப்போதைய லாக்டவுனாக இருக்கட்டும், மக்கள் அரசுக்கு துணைநிற்கிறார்கள். இந்தியா மக்கள்தொகை அதிகம் உள்ள நாடு. இங்கு சமூக விலகலையும், அரசு கூறும் விதிமுறைகளையும், மக்கள் பின்பற்றுவது கடினம் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால், இந்தியா சுயகட்டுப்பாட்டில், உலகத்திற்கே முன்னுதாரணமாக மாறியுள்ளது.

நான் வீட்டுக்குள் இருக்கலாம், ஆனால் எனக்காக மொத்தநாடும் போராடிக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் நினைவில் வைத்து கொண்டிருக்கிறான்.

இது ஒரு நீண்ட காலப்போர். எனவே நாம் சோர்ந்து விடக்கூடாது. கண்டிப்பாக வெற்றிபெற்றே தீருவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யும் பாஜக தொண்டர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முக கவசம் அணிவது, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை நாட்டுக்கும் உங்களுக்கும் நலன்பயக்கும். இவ்வாறு மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...