இது ஒரு நீண்ட காலப்போர். எனவே நாம் சோர்ந்து விடக் கூடாது. கண்டிப்பாக வெற்றிபெற்றே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பாஜக துவங்கப்பட்ட 40வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் மத்தியில் வீடியோ மூலமாக இன்று உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறியது:
இந்தவருடம் ஒரு இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. நமக்கு மட்டுமல்ல, மொத்த உலகுமே, அச்சுறுத்தலான காலகட்டத்தில் உள்ளது.
இந்ததொற்று நோய் தொடர்பான அபாயத்தை முதலில் நன்கு அறிந்துகொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து மாநிலங்களின் உதவிகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துரிதகதியில் எடுக்கப்படுகிறது. நமது தடுப்பு நடவடிக்கையை, உலகசுகாதார நிறுவனமும்கூட பாராட்டியுள்ளது.
நாட்டுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். சுய ஊரடங்கு காலகட்டமாக இருக்கட்டும், இப்போதைய லாக்டவுனாக இருக்கட்டும், மக்கள் அரசுக்கு துணைநிற்கிறார்கள். இந்தியா மக்கள்தொகை அதிகம் உள்ள நாடு. இங்கு சமூக விலகலையும், அரசு கூறும் விதிமுறைகளையும், மக்கள் பின்பற்றுவது கடினம் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால், இந்தியா சுயகட்டுப்பாட்டில், உலகத்திற்கே முன்னுதாரணமாக மாறியுள்ளது.
நான் வீட்டுக்குள் இருக்கலாம், ஆனால் எனக்காக மொத்தநாடும் போராடிக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் நினைவில் வைத்து கொண்டிருக்கிறான்.
இது ஒரு நீண்ட காலப்போர். எனவே நாம் சோர்ந்து விடக்கூடாது. கண்டிப்பாக வெற்றிபெற்றே தீருவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யும் பாஜக தொண்டர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முக கவசம் அணிவது, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை நாட்டுக்கும் உங்களுக்கும் நலன்பயக்கும். இவ்வாறு மோடி பேசினார்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |