உயரும் மோடியின் செல்வாக்கு

கரோனா வைரஸ் பிரச்சினையை திறம்பட கையாளுவதால் பிரதமர் நரேந்திரமோடியின் செல்வாக்கு உயர்ந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச்சேர்ந்த பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனம், ‘மார்னிங் கன்சல்ட்’. இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ஜப்பான், பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கரோனாவைரஸை எவ்வாறு கையாளுகின்றனர், அவர்களுக்கு மக்கள்மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது குறித்து இந்நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கைவெளியிட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி83% மக்கள் ஆதரவுடன் முதலிடத்தை பிடித்தார். மெக்சிகோ அதிபர்லோபஸ் ஒபரடோர் 65% ஆதரவுடன் 2-வது இடத்தையும், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 60 % ஆதரவுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர். அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோனுக்கு 9-வது இடமும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு 10-வது இடமும் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் மற்றும் சி-வோட்டர் இணைந்து அண்மையில் நாடு முழுவதும் மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

கரோனா வைரஸ் பரவலைதடுக்க முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தியபோது பிரதமர் நரேந்திர மோடிக்கு 76.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். அதன்பின் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தபோது பிரதமர் மோடியின் மக்கள் ஆதரவு 93.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோராகுவின் நல்லபலன் அளிக்கிறது என்று மருத்துவர்களில் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த மருந்துக்கு உலகம் முழுவதும் கடும்தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்தியா சார்பில் ஹைட்ராக்ஸி குளோராகுவின் மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்ந்துவருகிறது.

சர்வதேச அமைதி என்ற அமைப்பின் தெற்காசிய திட்டஇயக்குநர் மிலன் வைஷ்ணவ் கூறும்போது, “இக்கட்டான நேரத்தில் பிரதமர்மோடி திறம்பட செயல்பட்டு தனது செல்வாக்கை நிலை நிறுத்தியுள்ளார்” என்றார்.

உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் கரோனா வைரஸ் விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளன. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோராகுவின் மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவிலும் பிரதமர்
மோடியின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...