அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் கிளம்பிச் சென்றார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர், அமெரிக்கா செல்ல உள்ளார்.

பிரான்ஸ் கிளம்புவதற்கு முன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் 10 முதல் 12 தேதிகளில் பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். பாரிசில் நடக்கும் ஏ.ஐ., செயல் மாநாட்டில் இணை தலைமையேற்க ஆர்வமுடன் உள்ளேன். இம்மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கின்றனர். புதுமை மற்றும் பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள உள்ளோம்.

இந்த பயணமானது, இந்தியா பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பில் உள்ள வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். தொடர்ந்து, இருவரும் பிரான்சின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான மார்சீலி நகர் சென்று, இந்திய துணைத்தூதரக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளேன். பின்னர், தெர்மோநியூக்ளியர் அணுஉலை ஆராய்ச்சி மையத்திற்கும் செல்வதுடன் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளேன்.

இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, அதிபர் டிரம்ப் அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்கிறேன். அங்கு, எனது நண்பர் டிரம்ப்பை சந்திக்க ஆவலாக உள்ளேன். அவர் அதிபரான பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். அவரது முதலாவது ஆட்சிக்காலத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சர்வதேச ஒத்துழைப்பிற்கு இணைந்து பணியாற்றியது நினைவில் உள்ளது.

என்னுடைய எனது பயணமானது, தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் உயர்த்தவும்,அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். நமது இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். மேலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.