அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் கிளம்பிச் சென்றார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர், அமெரிக்கா செல்ல உள்ளார்.

பிரான்ஸ் கிளம்புவதற்கு முன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் 10 முதல் 12 தேதிகளில் பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். பாரிசில் நடக்கும் ஏ.ஐ., செயல் மாநாட்டில் இணை தலைமையேற்க ஆர்வமுடன் உள்ளேன். இம்மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கின்றனர். புதுமை மற்றும் பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள உள்ளோம்.

இந்த பயணமானது, இந்தியா பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பில் உள்ள வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். தொடர்ந்து, இருவரும் பிரான்சின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான மார்சீலி நகர் சென்று, இந்திய துணைத்தூதரக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளேன். பின்னர், தெர்மோநியூக்ளியர் அணுஉலை ஆராய்ச்சி மையத்திற்கும் செல்வதுடன் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளேன்.

இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, அதிபர் டிரம்ப் அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்கிறேன். அங்கு, எனது நண்பர் டிரம்ப்பை சந்திக்க ஆவலாக உள்ளேன். அவர் அதிபரான பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். அவரது முதலாவது ஆட்சிக்காலத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சர்வதேச ஒத்துழைப்பிற்கு இணைந்து பணியாற்றியது நினைவில் உள்ளது.

என்னுடைய எனது பயணமானது, தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் உயர்த்தவும்,அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். நமது இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். மேலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...