அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் கிளம்பிச் சென்றார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர், அமெரிக்கா செல்ல உள்ளார்.

பிரான்ஸ் கிளம்புவதற்கு முன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் 10 முதல் 12 தேதிகளில் பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். பாரிசில் நடக்கும் ஏ.ஐ., செயல் மாநாட்டில் இணை தலைமையேற்க ஆர்வமுடன் உள்ளேன். இம்மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கின்றனர். புதுமை மற்றும் பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள உள்ளோம்.

இந்த பயணமானது, இந்தியா பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பில் உள்ள வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். தொடர்ந்து, இருவரும் பிரான்சின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான மார்சீலி நகர் சென்று, இந்திய துணைத்தூதரக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளேன். பின்னர், தெர்மோநியூக்ளியர் அணுஉலை ஆராய்ச்சி மையத்திற்கும் செல்வதுடன் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளேன்.

இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, அதிபர் டிரம்ப் அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்கிறேன். அங்கு, எனது நண்பர் டிரம்ப்பை சந்திக்க ஆவலாக உள்ளேன். அவர் அதிபரான பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். அவரது முதலாவது ஆட்சிக்காலத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சர்வதேச ஒத்துழைப்பிற்கு இணைந்து பணியாற்றியது நினைவில் உள்ளது.

என்னுடைய எனது பயணமானது, தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் உயர்த்தவும்,அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். நமது இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். மேலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...