இருதரப்பு உறவுகளின் வெற்றி தொடரும் – பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முதல் பதவிக்காலத்தின்போது பெற்ற இருதரப்பு உறவுகளின் வெற்றிகள் தொடரும் என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு நேற்று புறப்பட்டார். அங்கிருந்து, அமெரிக்காவுக்கு இரண்டு நாள் பயணமாக நாளை செல்கிறார்.

டில்லியில் இருந்து நேற்று புறப்படுவதற்கு முன், பிரதமர் மோடி வெளியிட்ட செய்தி:

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அழைப்பை ஏற்று, அங்கு செல்கிறேன். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயல் மாநாட்டில் பங்கேற்கிறேன்.

இதில் பல உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகளாவிய வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளோம்.

பிரான்சின் மார்ஷலேயில் அமைந்துள்ள நம் நாட்டின் முதல் துணை துாதரகத்தை திறந்து வைக்க உள்ளேன்.

இதைத் தவிர, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு மஜார்கசில் அமைக்கப்பட்ட போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளேன்.

அதிபர் மேக்ரோனுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், 2047ம் ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டங்களை ஆய்வு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளேன்.

அங்கிருந்து, அமெரிக்காவுக்கு செல்கிறேன். மீண்டும் அதிபராகி உள்ள என் அருமை நண்பர் டொனால்டு டிரம்ப் அழைப்பை ஏற்று, அவரை நேரில் சந்திக்க ஆவலுடன் உள்ளேன். அவரது முதல் பதவிக்காலத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெற்ற வெற்றிகள் தொடரும்.

தொழில்நுட்பம், வர்த்தகம், ராணுவம், எரிசக்தி, வினியோக சங்கிலி என, பல துறைகளில் தொடர்ந்து இணைந்து செயல்படும் வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க உள்ளேன்.

இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலன்களுக்காகவும், உலகுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...