வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நிவாரணத்தில் பொன்னார்

கன்னியா குமரியில் பாஜக சார்பில் 2ம் கட்டமாக வந்து இறங்கிய நிவாரண பொருட்களை வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு ஒழுங்கு படுத்தும் பணியில்  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப் போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரம்காட்டி வருகின்றன.  அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்கும்வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தும் தவிப்பதால் பல்வேறு இடங்களில் மக்கள் உணவின்றி தவித்துவருகின்றனர்.

இவர்களுக்கு அரசியல் கட்சியினர் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். ஏற்கனவே முதற்கட்ட தமிழகம்முழுவதும் பாஜக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில்,  பாஜக சார்பில் 2ம் கட்டமாக நிவாரண பொருட்களை வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஒழுங்குபடுத்தும்பணியில் தனது தொண்டர்களுடன் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தபோதிலும், அதை எதையும் கருத்தில் கொள்ளாமல்  உணவு நில்லாமல் தவிக்கும்மக்களுக்கு உணவு வழங்கியும், இலவச நலத்திட்ட உதவிகளை வழங்கிவருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்றை பெற்றுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் என்ற எந்த ஒருபந்தாவும் இல்லாமல் என் தொகுதி மக்களுக்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள் என்ற தோணியில் எடுத்துகட்டிக் கொண்டு வேலைபார்க்கும் பொன்.ராதா கிருஷ்ணனின் பணி  பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...