ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது.
இன்று, மத்திய உள்துறை அமைச்சகம் ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஆந்திராவுக்கு ரூ.608.08 கோடியும், நாகலாந்துக்கு ரூ.170.99 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.225.24 கோடியும், தெலுங்கானாவுக்கு ரூ.231.75 கோடியும், திரிபுராவுக்கு ரூ.288.93 கோடியும் கூடுதல் பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |