16 பேர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை தருகிறது

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில், அதிகாலையில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீது சரக்குரயில் ஏறியதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்து, மிகுந்த வேதனையடைந்தேன் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில், ரயில்விபத்து காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பால், மிகுந்த வேதனையடைந்தேன்.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசினேன். அவர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப் பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் இன்று காலை ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 15 புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மகாராஷ்டி ராவிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு தண்டவாளம் வழியாக திரும்பிவந்து கொண்டிருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையிலிருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் பகுதிக்கு அருகில் உள்ள கர்மத் என்கிற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படுத்து தூங்கினர் என்றும், அச்சமயத்தில் அந்தவழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிகாலை 5:15 மணியளவில் நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை தொடங்கியிருந்தாலும் பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்குச் செல்ல தொடங்கி யுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...