ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை துவக்கி வைத்தார்: பிரதமர் மோடி

ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், தெலுங்கானாவில் சர்லாபள்ளி ரயில் நிலையம், ஜம்மு ரயில்வே மண்டலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.

ரயில்வே உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில், ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், தெலுங்கானாவில் சர்லாபள்ளி ரயில் நிலையம், ஜம்மு ரயில்வே மண்டலத்தையும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நம் நாட்டின் ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன. 2025ம் ஆண்டு துவக்கத்தில், ‘மெட்ரோ’ ரயில் சேவை, 1,000 கி.மீ., துாரத்தை எட்டியுள்ளன.

இப்போது துவங்கப்பட்டுள்ள இந்த மூன்று புதிய சேவைகள், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ரயில்வேயின் புதிய மைல்கல்லாக திகழும்.

ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

மொத்தம், 50 வழித்தடங்களில், 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் நடந்த சோதனை ஓட்டத்தில், வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ., வேகத்தை எட்டியுள்ளது.

நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...