ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை துவக்கி வைத்தார்: பிரதமர் மோடி

ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், தெலுங்கானாவில் சர்லாபள்ளி ரயில் நிலையம், ஜம்மு ரயில்வே மண்டலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.

ரயில்வே உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில், ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், தெலுங்கானாவில் சர்லாபள்ளி ரயில் நிலையம், ஜம்மு ரயில்வே மண்டலத்தையும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நம் நாட்டின் ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன. 2025ம் ஆண்டு துவக்கத்தில், ‘மெட்ரோ’ ரயில் சேவை, 1,000 கி.மீ., துாரத்தை எட்டியுள்ளன.

இப்போது துவங்கப்பட்டுள்ள இந்த மூன்று புதிய சேவைகள், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ரயில்வேயின் புதிய மைல்கல்லாக திகழும்.

ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

மொத்தம், 50 வழித்தடங்களில், 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் நடந்த சோதனை ஓட்டத்தில், வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ., வேகத்தை எட்டியுள்ளது.

நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ ...

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு , பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அ ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தி – வானதி சீனிவாசன் பேட்டி ''தி.மு.க., அரசு மீது மக்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும் அதிருப்தி ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வ ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் 'தமிழக நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., உடனே நிறைவேற்ற ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா ப ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி டில்லி இருந்து ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! எரிசக்தி, ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உரு ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம் – பிரதமர் மோடி ''அடுத்த, 1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் வகையிலான, நிர்வாக ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...