10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி

நாடுமுழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிவழங்கியுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூகஇடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியேவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டுசெல்ல மட்டுமே அனுமதி வழங்க பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப் பட்டுள்ளன.

மதக் கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதிவரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப் பட்டது. தொடர்ந்து மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு மாநிலங்கள் போக்குவரத்து, கடைகள் திறப்பு என பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன.

ஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘பெரும்பான்மையான மாணவர்களின் கல்விநலன் கருதி ஊரடங்கு காலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதேசமயம் முககவசம் அணிதல், சமூகவிலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

* கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வுமையங்கள் அமைக்கக்கூடாது

*ஆசியர்கள், மாணவர்கள் உடல்பரிசோதனை செய்யவேண்டும்

* கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

* தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்

*இதுபற்றி மாநில அரசு விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும்

* சமூகவிலலை எந்த காரணத்தாலும் புறக்கணிக்கக் கூடாது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...