பாகிஸ்தான் சிறையில் உள்ள ஏழு தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களின் இரண்டு படகுகளையும் விடுவிக்க, அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மீனவர்களுக்கு துாதரக அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாகிஸ்தான் அதிகாரிகள் அதை வழங்கவில்லை.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துாதரகம் வாயிலாக, மீனவர்களுக்கு துாதரக அனுமதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை, அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல் நலனை உறுதி செய்ய வேண்டும் எனவும், பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இந்திய துாதரகம் தொடர்ந்து கண்காணித்து, மீனவர்களை விடுவிப்பதற்கும், தாயகம் அழைத்து வருவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |