விரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோனா நெருக்கடி ஒரு வாய்ப்பு

இந்தியா — ஆஸ்திரேலியா உச்சிமாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்
மோரிசனுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் நரேந்திரமோடி உரையாடினார். ‘அப்போது, நாட்டின் பல்வேறு துறைகளிலும், விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளை துவங்க, கொரோனா நெருக்கடி, வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத் திருப்பதாக, தெரிவித்தார்.

ராணுவம், வர்த்தகம், சுகாதாரம் ஆகியதுறைகளில், இந்தியா — ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில், இருநாடுகள் இடையிலான உச்சி மாநாடு, நேற்றுநடந்தது.இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சந்தித்து, உரையாடினர்.

அப்போது, பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது:இந்தியா — ஆஸ்திரேலிய உறவை, மேலும் வலுப்படுத்த, சரியான நேரத்தில், சரியானசந்தர்ப்பம் அமைந்துள்ளதாக நம்புகிறேன். இந்த உறவை, விரைவாகவும், விரிவாகவும் வலுப்படுத்துவதில், இந்தியா உறுதி கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பால், உலகம்முழுதும், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒத்துழைப்புடன் கூடிய, கூட்டுமுயற்சியால் மட்டுமே, இதிலிருந்து மீள முடியும். இந்தசந்தர்ப்பத்தில், மற்ற நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்துவது அவசியமாகிறது.

நாட்டின் பல்வேறு துறைகளிலும், விரிவான சீர்த்திருத்தங்களை துவங்க, இந்த கொரோனா நெருக்கடி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத் திருப்பதாகவே கருதுகிறேன். இதன் முடிவுகள், விரைவில் தெரிய வரும்.தொற்று தீவிரம்அடைந்த காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியமக்கள், குறிப்பாக மாணவர்கள் மீது, அக்கறை எடுத்துக் கொண்டதற்கு,ஆஸ்திரேலிய அரசுக்கு நன்றி.இவ்வாறு, அவர்கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.