2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி

‘இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான கலாசார உறவுகளை கொண்டுள்ளன’ என பிரதமர் மோடி பேசினார்.

தாய்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பவுத்த மாநாட்டில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: பகவான் புத்தரின் போதனைகள் உலகை அமைதியான முறையில் வழி நடத்துகிறது. இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான கலாசார உறவுகள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பல துறைகளில் உறவுகள் மேம்பட்டு உள்ளன.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் வழிகாட்டுதலை பவுத்தம் வழங்குகிறது. பகவான் புத்தர் மீதான நமது மரியாதை இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளில் பிரதிபலிக்கிறது.

புத்த மதம் தொடர்பான புண்ணியத்தலங்களை இணைக்க இந்தியா சுற்றுலா உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

நாளந்தா மகாவிஹாரா வரலாற்றில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளில் புத்தரின் போதனைகளை உலக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக பல நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...