லடாக்கிலே என்ன பிரச்சினை?

லடாக்கின் பிரச்சினை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள கூடியது. சில்க் ரோட் எனப்படும் பட்டுவழிச் சாலையிலே லடாக் ஒரு முக்கிய இணைக்கும் புள்ளி. சீனா பாக்கிஸ்தான் பொருளாதாரவழி எனும் திட்டத்தின் எல்லா ரோடுகளும் போக வர லடாக் முக்கியமான இடம்.

இதனால்தான் தெற்கு திபெத் எனப்படும் அருணாச்சல் பிரதேசத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் சீனா லடாக்கின் மீது குறியாக இருக்கிறது.

ஆனால் அதான் இந்த பிரச்சினை 70 வருசமா இருக்கே இப்போ என்ன புதுசான்னா?

நமது அரசு இப்போது அங்கே நல்ல சாலை வசதிகளை அமைக்கிறது. இது சீனாவுக்கு ஏற்புடையதல்ல. ஏனென்றால் நல்ல சாலை வசதிகள் இருந்தால் ராணுவம் விரைவாக அப்பகுதியை அடையும்.

அதுமட்டும் தானா பிரச்சினை என்றால் இல்லை. 370 ஐ நீக்கியதும் சீனாவுக்கு பெருத்தபயத்தை கொடுத்திருக்கிறது.370க்கு முன்பு வரை லடாக் பகுதி கவனிக்கப்படவே இல்லை. காஷ்மீரத்து விலைபோன அரசியல்வியாதிகளோ சீனா பாக்கிஸ்தான் பொருளாதார வழி திட்டத்திலே சேர்ந்துகொண்டால் காஷ்மீருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என பேசி வந்தார்கள் எனவே சீனா நம்பிக்கையாக இருந்தது லடாக் சீனாவுக்குத்தான் என.

அதுக்கு ஆப்பு 370 வழியாக வந்தது. சீனா இதை எதிர்பார்க்கவில்லை.

இப்போது மோடி அரசு அந்த 370 ஐ திரும்பவும் கொண்டு வந்தால் ஒழிய லடாக்கிலே பிரச்சினையை தீர்க்கமாட்டோம் என சொல்லியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதிலே இன்னோர் தகவலும் உண்டு, நமது ராணுவம் நேற்றைய தினங்களிலே குண்டு வீசித்தாக்கியதிலே பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவுக்கு போகும் பாதை துண்டிப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வந்திருக்கிறது.

எனவே இந்த துண்டிப்பு சீனாவுக்கு பெரும் சிக்கல். மலாய்க்கா ஸ்ரெயிட்ஸ் எனப்படும் சிங்கப்பூர் வழியாக போகும் நீர்ப்போக்குவரத்து முடக்கப்பட்டால் சீனாவின் மொத்த ஏற்றுமதிக்கும் ஆபத்து. எனவே தான் இந்தப்பக்கம் ஒரு தரைவழி இணைப்பு தொடங்கியது.

அதிலே சேரும்படி நம்மை மிரட்டி பார்த்தது.370 ஐ நீக்கியதற்குபின்பு ஐநா சபைவரை போவோம் என மிரட்டி பார்த்தது.

மோடியோ எதற்கும் மசியவில்லை கண்டுகொள்ளவில்லை.

கடைசி முயற்சியாக இதிலெ இறங்கியிருக்கிறது.

அப்படியானால் நம்பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டதா? இல்லை. எப்படி?

பாக்கிஸ்தான் எல்லை போல சீனாவுடனான எல்லை வரையறுக்கப் படவில்லை. அங்கே நடுவிலே இருக்கும் பகுதியை இரண்டு நாடுகளும் உரிமை கொண்டாடு கின்றன.

நடுவிலே இருக்கும்பகுதிக்கு யார் போனாலும் பிரச்சினை தான். ஆனால் முடிவு எட்டப்படும் வரை யாருக்கும் சொந்தமில்லை என பேசிக்கொண்டிருக்கிறோம்.

சரி இப்போது என்ன பிரச்சினை?

காவான் பள்ளத்தாக்கு எனும் பள்ளத்தாக்கிலே சீனப்படைகள் நுழைய முயன்று தடுக்கப்பட்டன. ஆனால் நமது ராணுவம் அதை ஆக்கிரமித்து உள்ளது என சீனா சொல்கிறது.

இதனால் போர்வருமா?

சீனாவுக்கு போரை துவக்குதிலே எல்லாம் விருப்பமில்லை. வெல்ல முடியாது என தெரியும். ஆனால் இப்படி மாதமொருமுறை பிரச்சின செய்துகொண்டே இருக்கும்.

தீர்வு தான் என்ன?

சீனா தன்னுடைய ஆதிக்க குணத்தை கைவிடும் வரை தீர்வு எட்டப்பட முடியாது. முன்பை விட இப்போது நமது வளர்ச்சியை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கிறது. பாக்கிகளை வைத்து தொல்லை கொடுக்கலாம் என்றிருந்ததற்கு மோடி முடிவு கட்டிவிட்டார் என்பதால் இப்போது நேரடியாக களமிறங்கியிருக்கிறது.

மோடி இதற்கும் ஒரு முடிவு காண்பார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...