இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது

இந்தியா – சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்றம் தணியவும், எல்லையில் படைகளை குறைக்கவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள கசானில் அக்டோபர் 22, 23ம் தேதி 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, அக்டோபர் 23ம் தேதி ரஷ்யா செல்கிறார். மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும், பல்வேறு இடங்களில் சுமூக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

ஜூலை மாதத்தில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தனர், கடந்த செப்டம்பர் மாத கடைசியில் பீஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் லடாக்கின் கிழக்கு பகுதி எல்லை பிரச்னை 75 சதவீதம் தீர்க்கப்பட்டதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, லடாக்கின் கிழக்கு பகுதி எல்லையில், ரோந்து செல்வது தொடர்பான ஒப்பந்தத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு குறித்து, இது வரை தகவல் இல்லை.

இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ”இந்த ஒப்பந்தம் மூலம், 2020 மே மாதத்துக்கு முன் எந்த எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் ரோந்து சென்றார்களோ, அதே நிலை இப்போது மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இரு தரப்புக்கும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இது, எல்லையில் அமைதி நிலவுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...