இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது

இந்தியா – சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்றம் தணியவும், எல்லையில் படைகளை குறைக்கவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள கசானில் அக்டோபர் 22, 23ம் தேதி 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, அக்டோபர் 23ம் தேதி ரஷ்யா செல்கிறார். மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும், பல்வேறு இடங்களில் சுமூக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

ஜூலை மாதத்தில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தனர், கடந்த செப்டம்பர் மாத கடைசியில் பீஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் லடாக்கின் கிழக்கு பகுதி எல்லை பிரச்னை 75 சதவீதம் தீர்க்கப்பட்டதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, லடாக்கின் கிழக்கு பகுதி எல்லையில், ரோந்து செல்வது தொடர்பான ஒப்பந்தத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு குறித்து, இது வரை தகவல் இல்லை.

இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ”இந்த ஒப்பந்தம் மூலம், 2020 மே மாதத்துக்கு முன் எந்த எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் ரோந்து சென்றார்களோ, அதே நிலை இப்போது மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இரு தரப்புக்கும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இது, எல்லையில் அமைதி நிலவுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...