சர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது

சர்வதேச தூயமின்சக்தி சந்தையில் இந்தியா அதிகம் ஈர்க்கப்படும் சந்தையாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரெவா பகுதியில் 750 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட சோலார் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சிவாயிலாக திறந்து வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இன்று மட்டுமல்ல 21ம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய திறன் சோலார் சக்திக்கு உண்டு. சோலார் மின் சக்தி நிச்சயமாக தூய்மையான, பாதுகாப்பான மின்சாரமாக இருக்கிறது. உலகின் ஐந்து மிகப் பெரிய சோலார் மின் சக்தி உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்று. ரெவா சோலார் ஆலை மத்திய பிரதேசத்திற்கு மட்டுமல்லாமல் டெல்லி மெட்ரோவுக்கும் மின் சாரம் விநியோகிக்கும்.

சர்வதேச அளவில் சோலார் மின் சக்தி துறையில் இந்தியா அதிகளவில் ஈர்க்கப்படும் சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தூய்மையான, விலைகுறைவான மின்சக்தி உற்பத்தியில் மத்தியப் பிரதேசம் ஒருமுன்னணி மையமாக உருவெடுக்கும்

ரெவா இன்று வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி ஆலையை ரெவாபெற்றிருக்கிறது. இதற்காக மத்தியப் பிரதேச, ரெவா மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தசாப்தத்தில் ரெவாவை மின்சக்தி மையமாக உருமாற்றுவதற்கு இந்த ஆலை உதவும்” என்று தெரிவித்தார்.

இந்த காணொளிக் காட்சி சந்திப்பில் மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய மின் சக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் பங்கேற்றனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...