சர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது

சர்வதேச தூயமின்சக்தி சந்தையில் இந்தியா அதிகம் ஈர்க்கப்படும் சந்தையாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரெவா பகுதியில் 750 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட சோலார் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சிவாயிலாக திறந்து வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இன்று மட்டுமல்ல 21ம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய திறன் சோலார் சக்திக்கு உண்டு. சோலார் மின் சக்தி நிச்சயமாக தூய்மையான, பாதுகாப்பான மின்சாரமாக இருக்கிறது. உலகின் ஐந்து மிகப் பெரிய சோலார் மின் சக்தி உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்று. ரெவா சோலார் ஆலை மத்திய பிரதேசத்திற்கு மட்டுமல்லாமல் டெல்லி மெட்ரோவுக்கும் மின் சாரம் விநியோகிக்கும்.

சர்வதேச அளவில் சோலார் மின் சக்தி துறையில் இந்தியா அதிகளவில் ஈர்க்கப்படும் சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தூய்மையான, விலைகுறைவான மின்சக்தி உற்பத்தியில் மத்தியப் பிரதேசம் ஒருமுன்னணி மையமாக உருவெடுக்கும்

ரெவா இன்று வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி ஆலையை ரெவாபெற்றிருக்கிறது. இதற்காக மத்தியப் பிரதேச, ரெவா மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தசாப்தத்தில் ரெவாவை மின்சக்தி மையமாக உருமாற்றுவதற்கு இந்த ஆலை உதவும்” என்று தெரிவித்தார்.

இந்த காணொளிக் காட்சி சந்திப்பில் மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய மின் சக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் பங்கேற்றனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...