சர்வதேச தூயமின்சக்தி சந்தையில் இந்தியா அதிகம் ஈர்க்கப்படும் சந்தையாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரெவா பகுதியில் 750 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட சோலார் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சிவாயிலாக திறந்து வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “இன்று மட்டுமல்ல 21ம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய திறன் சோலார் சக்திக்கு உண்டு. சோலார் மின் சக்தி நிச்சயமாக தூய்மையான, பாதுகாப்பான மின்சாரமாக இருக்கிறது. உலகின் ஐந்து மிகப் பெரிய சோலார் மின் சக்தி உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்று. ரெவா சோலார் ஆலை மத்திய பிரதேசத்திற்கு மட்டுமல்லாமல் டெல்லி மெட்ரோவுக்கும் மின் சாரம் விநியோகிக்கும்.
சர்வதேச அளவில் சோலார் மின் சக்தி துறையில் இந்தியா அதிகளவில் ஈர்க்கப்படும் சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தூய்மையான, விலைகுறைவான மின்சக்தி உற்பத்தியில் மத்தியப் பிரதேசம் ஒருமுன்னணி மையமாக உருவெடுக்கும்
ரெவா இன்று வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி ஆலையை ரெவாபெற்றிருக்கிறது. இதற்காக மத்தியப் பிரதேச, ரெவா மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தசாப்தத்தில் ரெவாவை மின்சக்தி மையமாக உருமாற்றுவதற்கு இந்த ஆலை உதவும்” என்று தெரிவித்தார்.
இந்த காணொளிக் காட்சி சந்திப்பில் மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய மின் சக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் பங்கேற்றனர்
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |