நான் நன்றாக இருக்கிறேன்

நான் நன்றாக இருக்கிறேன்” ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் படி நான் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறேன் என அமித் ஷா தெரிவித்துள்ளார். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தவைரஸ் அனைத்து தரப்பு மக்களையும் எந்த பாகுபாடுமின்றி தாக்கிவருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் களத்தில் முன்னணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள், காவல் துறையினர் என அனைத்து தரப்பினரும் கொரோனா தொற்றால் பரவலாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது :- எனக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்து, கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன், பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி யுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன், எனது உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். என கூறியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமை படுத்தி கொள்வதுடன், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரசுக்கு எதிரான களத்தில் அமித் ஷா சுற்றி சுழன்று பணியாற்றி வருகிறார். டெல்லியில் கொரோனா வேகம் எடுத்தநிலையில், அவர் அம்மாநில முதலமைச்சருடனும், அதிகாரிகளுடனும் பலசுற்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி தொற்றை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கையை எடுத்தார். அதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ளது. முழு அடைப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்றவற்றில் வழிகாட்டுதல்களை உருவாக்குவதிலும் அமித் ஷா முக்கியபங்கு வகித்துவந்தார். அவர் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் நாளை மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில் வைரஸ்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை அவரே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேநேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புவதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...