கேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண்ணாவிரதம்

தங்கக் கடத்தல்வழக்கு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று கேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.

கேரள மாநிலத்தில் தூதரக போா்வையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம்கடத்திய வழக்கில் தாா்மிகப் பொறுப்பேற்று முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பாஜக நடத்திவரும் தொடா் போராட்டத்தின் ஒருபகுதியாக இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

 

பாஜக தேசிய பொதுச்செயலாளா் பூபேந்திர யாதவ் காணொலி காட்சி வாயிலாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். கட்சியின் மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் தலைமை வகித்தாா்.

இந்தவிவகாரம் தொடா்பாக இணைய வழி பொதுக்கூட்டம் நடத்தவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதனை கட்சியின் முன்னாள் மாநில தலைவா் கும்மணம் ராஜசேகரன் தொடங்கிவைக்க உள்ளாா்.

கேரள முதல்வா் பதவி விலக வலியுறுத்தி மத்தியஅமைச்சா் வி.முரளீதரனும் புது தில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) உண்ணா விரதப் போராட்டம் நடத்த உள்ளாா்.

தங்கக்கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைச் சோ்ந்த இருமுன்னாள் ஊழியா்கள் மற்றும் சிலா் கைது செய்யப்பட்டதை தொடா்ந்து கேரளஅரசு கடும் விமா்சனத்துக் குள்ளாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வா் அலுவலகத்துக்கும் தொடா்பு இருப்பதாக தெரிய வருகிறது . ஆனால் அதனை அந்த மாநில அரசு மறுத்துள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட, கேரள மாநில முன்னாள் முதன்மைச் செயலாளரான எம்.சிவசங்கரிடம் தேசிய பாதுகாப்புமுகமை (என்ஐஏ) இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...