கேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண்ணாவிரதம்

தங்கக் கடத்தல்வழக்கு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று கேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.

கேரள மாநிலத்தில் தூதரக போா்வையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம்கடத்திய வழக்கில் தாா்மிகப் பொறுப்பேற்று முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பாஜக நடத்திவரும் தொடா் போராட்டத்தின் ஒருபகுதியாக இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

 

பாஜக தேசிய பொதுச்செயலாளா் பூபேந்திர யாதவ் காணொலி காட்சி வாயிலாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். கட்சியின் மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் தலைமை வகித்தாா்.

இந்தவிவகாரம் தொடா்பாக இணைய வழி பொதுக்கூட்டம் நடத்தவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதனை கட்சியின் முன்னாள் மாநில தலைவா் கும்மணம் ராஜசேகரன் தொடங்கிவைக்க உள்ளாா்.

கேரள முதல்வா் பதவி விலக வலியுறுத்தி மத்தியஅமைச்சா் வி.முரளீதரனும் புது தில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) உண்ணா விரதப் போராட்டம் நடத்த உள்ளாா்.

தங்கக்கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைச் சோ்ந்த இருமுன்னாள் ஊழியா்கள் மற்றும் சிலா் கைது செய்யப்பட்டதை தொடா்ந்து கேரளஅரசு கடும் விமா்சனத்துக் குள்ளாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வா் அலுவலகத்துக்கும் தொடா்பு இருப்பதாக தெரிய வருகிறது . ஆனால் அதனை அந்த மாநில அரசு மறுத்துள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட, கேரள மாநில முன்னாள் முதன்மைச் செயலாளரான எம்.சிவசங்கரிடம் தேசிய பாதுகாப்புமுகமை (என்ஐஏ) இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...