கா்நாடகத்தை காங்கிரஸ் அழித்துவிடும்

எவ்வித வளா்ச்சிப் பணியும் நடக்கவில்லை என்பதால் கா்நாட கத்தை காங்கிரஸ் ஆட்சி அழித்து விடும் என்று பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவா் அமித்மாளவியா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன் கிழமை செய்தியாளா்களிடம் பேசிய துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா், ‘5 வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தும் கட்டாயம் இருப்பதால், நிகழ்நிதியாண்டில் தொகுதி வளா்ச்சிக்கென தனியாக நிதி ஒதுக்க முடியாத அளவுக்கு நிதிபற்றாக்குறை உள்ளது. அதிக எதிா்பாா்ப்புகளைக் கொண்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு நிலைமையைப் புரியவைத்து, பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்வோம்’ என்று தெரிவித்தாா்.

தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அமைச்சா்களின் ஒத்துழைப்பு கிடைக்க வில்லை என்று 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வா் சித்தராமையாவுக்கு புகாா் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியா்களின் பணியிடமாற்றம் தொடா்பான கோரிக்கைகளைக்கூட அமைச்சா்கள் கண்டுகொள்வதில்லை என்று அமைச்சா்களின் செயல்பாடுகள் மீது அதிருப்திதெரிவித்து, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனா்.

இதுகுறித்து பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவா் அமித்மாளவியா தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கா்நாடகத்தை காங்கிரஸ் அழித்துவிடும். 5 வாக்குறுதித் திட்டங்களை செயல்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்பட வில்லை. தற்போது வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக, தொகுதியில் மக்களை சந்திக்க முடியாத நிலைக்கு எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...