கா்நாடகத்தை காங்கிரஸ் அழித்துவிடும்

எவ்வித வளா்ச்சிப் பணியும் நடக்கவில்லை என்பதால் கா்நாட கத்தை காங்கிரஸ் ஆட்சி அழித்து விடும் என்று பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவா் அமித்மாளவியா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன் கிழமை செய்தியாளா்களிடம் பேசிய துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா், ‘5 வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தும் கட்டாயம் இருப்பதால், நிகழ்நிதியாண்டில் தொகுதி வளா்ச்சிக்கென தனியாக நிதி ஒதுக்க முடியாத அளவுக்கு நிதிபற்றாக்குறை உள்ளது. அதிக எதிா்பாா்ப்புகளைக் கொண்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு நிலைமையைப் புரியவைத்து, பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்வோம்’ என்று தெரிவித்தாா்.

தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அமைச்சா்களின் ஒத்துழைப்பு கிடைக்க வில்லை என்று 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வா் சித்தராமையாவுக்கு புகாா் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியா்களின் பணியிடமாற்றம் தொடா்பான கோரிக்கைகளைக்கூட அமைச்சா்கள் கண்டுகொள்வதில்லை என்று அமைச்சா்களின் செயல்பாடுகள் மீது அதிருப்திதெரிவித்து, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனா்.

இதுகுறித்து பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவா் அமித்மாளவியா தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கா்நாடகத்தை காங்கிரஸ் அழித்துவிடும். 5 வாக்குறுதித் திட்டங்களை செயல்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்பட வில்லை. தற்போது வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக, தொகுதியில் மக்களை சந்திக்க முடியாத நிலைக்கு எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...