பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வரை நேரில்சந்தித்து கோரிக்கை

தமிழகத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதிவழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில்சந்தித்து கோரிக்கை விடுத்தார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

கொரோனா நோய் பரவலை கருத்தில்கொண்டு, இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது, ஊர்வலம் செல்வது போன்றவற்றுக்குத் தடைவிதிப்பதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் வீடுகளிலேயே கொண்டாடுமாறு அந்த அறிக்கையில் தமிழகஅரசு கேட்டுக்கொண்டது. இதனிடையே தடையை மீறி விநாயகர் சிலையை நிறுவுவோம் என்று பல இந்து அமைப்புகள் பல அறிவித்துள்ளன.

இந்தபரபரப்பான சூழ்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் அவரை நேரில்சென்று சந்தித்தார் பாஜக மாநில தலைவர் முருகன்.

சுமார் அரை மணிநேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதற்குப்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகன், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் விநாயகர் சிலைகளை நிறுவி அவற்றை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கவேண்டும், என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

விநாயகர் சிலையை நிறுவுவதற்கும், வழிபடுவதற்கும் அனுமதி வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். கோவில்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, கோவில்வளாகத்தில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டு, பின்னர் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அவற்றை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கலாம் என்பது எனதுதரப்பில் வழங்கப்பட்ட ஆலோசனை. இவ்வாறு முருகன் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...