விரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும்

கரோனா வைரஸ் பரவல்காரணமாகவே குடியுரிமமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறை படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது. விரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும் என்று பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.

மேற்குவங்க மாநிலம் சிலிகுரிக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்றுள்ளார். அங்குள்ள ஆனந்தமாயி காளிகோயிலில் நட்டா வழிபாடு செய்தார்.

அதன்பின் பாஜக தொண்டர்கள் மத்தியில் ஜே.பி.நட்டா பேசியதாவது:

“மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி அரசு பிரிவினை, வகுப்புவாத அரசியலை நடத்துகிறது. அரசியல் நலன்பார்த்து மக்களுக்குச் சேவைசெய்கிறது. ஆனால், பாஜக அனைத்து மக்களுக்கும் சேர்த்து பணியாற்றுகிறது.

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தில் அனைவரும் பயன்பெறுவார்கள். இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதை நடைமுறைப்படுத்த உறுதியாக இருக்கிறோம்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாகவே குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது சூழல் முன்னேற்றம் அடைந்துவருகிறது. ஆதலால் சிஏஏவை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குடியுரிமைத் திருத்தச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.

அடுத்த ஆண்டு மேற்குவங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் பாஜக ஆட்சியை பிடிக்கும் என நம்புகிறோம். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும்வன்முறை, கமிஷன் போன்றவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்”.

இவ்வாறு நட்டா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...