குறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி

கோவிட்-19 தடுப்பூசியை குறைந்தவிலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வதே ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய முக்கியபணியாக அமைந்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறினார்.

மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் உலக வங்கி-சர்வதேச நிதியத்தின் ஆண்டுக்கூட்டத்தில் மெய்நிகர் வாயிலாக இன்று கலந்துகொண்டு உரையாற்றினார்.

“கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் ஆரம்பசுகாதார விநியோக அமைப்பில் முதலீடு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், அனைவரின் ஒத்துழைப்புடன் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்று கூறினார்.

“கோவிட் பரவல், இடையூறை அளித்துள்ள போதும், அதிலிருந்து நாம் மீண்டுவரவும், எதிர்காலத்திற்குத் தயாராவதற்கும் அது நமக்குக் கற்றுத்தந்துள்ளது”, என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட் 19 தடுப்பு முயற்சியில் தனியார்துறையின் பங்கினை பாராட்டிய அமைச்சர், கோவிட் பரவலுக்கு எதிரான இந்தபோராட்டத்தில், தனியாரின் புதிய கண்டுபிடிப்புகள், திறமை ஆகியவையும் பெரும் உதவியாக இருந்துவருகிறது. பீபிஈ, என்95 முகக் கவசங்கள், பிராணவாயு, செயற்கை சுவாச கருவிகள், பரிசோதனைக் கருவிகள் போன்றவை அதிவிரைவில் தயாரிக்கபட்டு, போதுமான கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ உள்கட்டமைப்பு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து, கடந்த மார்ச்மாதம் ஒரு ஆய்வகத்திலிருந்து, இன்றைய தேதியில் 2000 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவை தனியார் துறையைச்சார்ந்தது. இதேபோல் தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் மற்றும் தனிமைபடுத்தப்படும் மையங்களுக்கும் இது பொருந்தும்”, என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அசாதாரண சூழலால் உலகமே பல்வேறு சவால்களை சந்தித்துவரும் நிலையில், இந்தியா, கோவிட்டை கட்டுப்படுத்த, மெய்நிகர் தொடர்பான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆரோக்கியசேது செயலி, தொற்றுபரவ சாத்தியமுள்ள தொகுப்புகளை ட்ராக்கிங் மூலம் கண்டறியும் இதிஹாஸ் தொழில்நுட்பம், பரிசோதனைகளை மேற்கொள்ளவும், நோய்தொற்றால் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் குறித்த தகவல்களை அறியவும், கோவிட்சார்ந்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ஆர்டி-பிசிஆர் செயலி போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

அனைவருக்கும் சுகாதார சேவையைக் கொண்டுசேர்க்கும் வகையிலும், அசாதாரண சூழலை சமாளிக்கும் வகையிலும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியவர், “272 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சிறப்புபொருளாதார மற்றும் விரிவான தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்சார்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஆகும். இதன் மூலம் பொதுசுகாதாரம் மற்றும் சுகாதார சீர்திருத்தங்களுக்கான முதலீடுகளை அதிகரிப்பதுடன் எதிர் காலத்தில் இதுபோன்ற சூழலுக்கு இந்தியாவை தயார்படுத்தவும் முடியும்” என்று கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசியை குறைந்தவிலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வதே ஆராய்ச்சி யாளர்களின் தற்போதைய முக்கிய பணியாக அமைந்துள்ளது என்றும், தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து 3 இந்தியமருந்து நிறுவனங்கள், தடுப்பூசியின் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

One response to “குறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...