ஓய்வூதியர்களின் குறைகளை தீர்ப்பதற்கான பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார்

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் குடும்ப ஓய்வூதியக் குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று  தொடங்கி வைத்தார்.

தேச நிர்மாணப்பணியில் ஓய்வூதியதாரர்கள் சம பங்குதாரர்கள் என்று வர்ணித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு), புவி அறிவியல்துறை (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். எளிதாக ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் ஓய்வூதியதாரர்களைக்கௌரவிப்பது நமது கடமை என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உணர்திறனுடன் முடிவுகளை எடுத்துள்ளதாக   டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.

60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் கணிசமான எண்ணிக்கையை புறக்கணிக்க முடியாது என்றும், ஓய்வூதியம் சமூக-பொருளாதார தாக்கத்தை உருவாக்குகிறது, இதனால் அவர்கள் கண்ணியத்துடன் வாழ அதிகாரம் அளிக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் தமது துறை எடுத்த முயற்சிகளை எடுத்துரைத்தார். CPENGRAMS இணையதளத்தில் நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதிய வழக்குகளை உரிய நேரத்தில் தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு முகாம் ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை நீடிக்கும். 46 துறைகள் / அமைச்சகங்களின் 1891 குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகள் முகாமிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இருதரப்பு நாடுகளின் பாதுகாப்ப ...

இருதரப்பு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளின் முன்னேற்றம் பற்றிய உரையாடல் ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெசுடன் பாதுகாப்பு ...

தேசிய ஹைட்ரஜன் பசுமை இயக்கத்தி ...

தேசிய ஹைட்ரஜன் பசுமை இயக்கத்தின் கீழ் சோதனைக்கூடங்கள் அடிப்படை கட்டமைப்பின் திட்டங்களை  மத்திய அரசு அறிவித்துள்ளது தரம், ஒழுங்குமுறை கட்டமைப்பின் மேம்பாட்டுக்காக, தேசியப் பசுமை ஹைட்ரஜன் ...

பொதுமக்களின் பாதுகாப்புக்கு ம ...

பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் -பியூஷ் கோயல் பெட்ரோலியம், வெடிபொருட்கள், பட்டாசு மற்றும் பிற தொடர்புடைய தொழில்துறை ...

பயங்கரவாதிகளை உருவாக்கும் நாட ...

பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடுகளை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும் -மோடி  பேச்சு பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடுகளை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும்'' ...

நாட்டு மக்கள் எங்கள்மீது நம்பி ...

நாட்டு மக்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே “நாட்டு மக்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது ...

இந்தியாவின் முன்னேற்றத்தை உலக ...

இந்தியாவின் முன்னேற்றத்தை உலகம் மிகுந்த உன்னிப்பாக கவனித்து வருகிறது நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...