உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே பி நட்டா விவாதம்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா குடும்பக் கட்டுப்பாடு குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று விவாதித்தார். “தாய்-சேய் நலனுக்காக ஆரோக்கியமான காலமும், கருவுறுதலில் இடைவெளியும்” என்ற மையப்பொருளில்  நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர்  அனுப்பிரியா பட்டேல் முன்னிலை வகித்தார்.

உலக மக்கள் தொகையில் 5-ல் ஒரு பங்கினை இந்தியா கொண்டிருப்பதை எடுத்துரைத்த  அவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை  மறுஉறுதி செய்யும் வகையில், உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  சிறு குடும்பங்கள் என்ற நெறிமுறையை சாதித்து இந்தியாவில் உள்ள குடும்பங்களை ஆரோக்கியமாக  பராமரிப்பதன் மூலமே,  வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என்று  அவர் கூறினார்.

குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்வதற்கான தெரிவு பெண்களின் உரிமை என்பதை உறுதி செய்வதற்கும், விருப்பமில்லாத கருவுறுதல் சுமையை உருவாக்காமல் இருப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள், கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அரசின் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றான குடும்ப நல இயக்கம் என்பது பற்றி பேசிய திரு நட்டா, இது முதலில் 7 மாநிலங்களின் 146 உயர் முன்னுரிமை மாவட்டங்களில் தொடங்கப்பட்டதாகவும், பின்னர் இந்த மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும், 6 வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். குடும்பக் கட்டுப்பாடு குறித்த தகவலை கடைக்கோடி பகுதி வரை பரவலாக்கிய சுகாதார, முன்கள, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் அயராத உழைப்பையும் டாக்டர் நட்டா பாராட்டினார்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல், மத்திய அரசின் குடும்ப நலத்திட்டம் ஏற்கனவே இரண்டு நிலைகளில் நடத்தப்பட்டதாகவும், தற்போது தயாரிப்பு கட்டம், சமூகப் பங்கேற்பு, சேவை வழங்குதல் என்ற  3 நிலைகளில் நடத்தப்படுவதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வின் போது, சுகம் என்ற குடும்பக்கட்டுப்பாடு மாதிரி வடிவம் காட்சிப்படுத்தப்பட்டதோடு, உலக மக்கள் தொகை தினம் 2024-க்கான நடப்பாண்டின் மையப்பொருள் குறித்த சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின்  சுகாதாரத்துறை, முதன்மை செயலாளர்கள் தங்களின் அனுபவங்களையும், தாங்கள் சந்தித்த சவால்களையும் எடுத்துரைத்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...