தேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றுவோம்

மத்திய பிரதேசம் உள்பட நாடுமுழுவதும் மொத்தம் 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 40க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக. வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், நாடுமுழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக.வுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய பிரதேச மக்கள் இன்று மாநிலத்தின் நிலையான, வலுவான அரசை தேர்வுசெய்துள்ளனர். பாஜக மீது ம.பி., மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. ம.பி.,யில் சிவராஜ்சிங் தலைமையிலான அரசின் வளர்ச்சிப்பயணம் இன்னும் வேகம் எடுக்கும்.

உ.பி., இடைத்தேர்தலில் பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. உ.பி., அரசின் முயற்சிகளுக்கு, இடைத்தேர்தல் முடிவுகள் அதிக உத்வேகத்தை அளிக்கும். யோகிஅரசு, மாநில வளர்ச்சியில் புதியஉயரங்களை தொடும்.

தெலுங்கானா மாநிலம் துபாக்கா மற்றும் கர்நாடக மாநிலம் ஷிரா, ராஜராஜேஸ்வரா நகரில் பெற்றவெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதற்காக பா.ஜ., கட்சியினர் கடுமையாக உழைத்தனர். பா.ஜ., வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் அவர்கள் நல்லபடியாக கொண்டு சேர்த்தனர். குஜராத்துடனான பா.ஜ.,வின் பிணைப்பு பிரிக்க முடியாதது. இடைத்தேர்தலில் 8 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றிஅளித்த மக்களுக்கு நன்றி.

ஜனநாயகத்தின் முதல்பாடத்தை பீகார் உலகிற்கு கற்பித்துள்ளது. ஜனநாயகம் எவ்வாறு பலப்படுத்தப் படுகிறது என்பதை இன்று பீகார் மீண்டும் உலகிற்கு தெரிவித்துள்ளது. பீகார் இளைஞர்கள், பெண்கள் எங்களை நம்பி ஓட்டளித்துள்ளனர். இந்த இளமை ஆற்றல், எங்களை முன்பைவிட அதிகமாக உழைக்க ஊக்குவித்துள்ளது.பீகாரில் மாநிலவளர்ச்சி மற்றும் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும், நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என மீண்டும் உறுதிஅளிக்கிறேன். மக்களுக்கு என் நன்றிகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...