தேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றுவோம்

மத்திய பிரதேசம் உள்பட நாடுமுழுவதும் மொத்தம் 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 40க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக. வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், நாடுமுழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக.வுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய பிரதேச மக்கள் இன்று மாநிலத்தின் நிலையான, வலுவான அரசை தேர்வுசெய்துள்ளனர். பாஜக மீது ம.பி., மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. ம.பி.,யில் சிவராஜ்சிங் தலைமையிலான அரசின் வளர்ச்சிப்பயணம் இன்னும் வேகம் எடுக்கும்.

உ.பி., இடைத்தேர்தலில் பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. உ.பி., அரசின் முயற்சிகளுக்கு, இடைத்தேர்தல் முடிவுகள் அதிக உத்வேகத்தை அளிக்கும். யோகிஅரசு, மாநில வளர்ச்சியில் புதியஉயரங்களை தொடும்.

தெலுங்கானா மாநிலம் துபாக்கா மற்றும் கர்நாடக மாநிலம் ஷிரா, ராஜராஜேஸ்வரா நகரில் பெற்றவெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதற்காக பா.ஜ., கட்சியினர் கடுமையாக உழைத்தனர். பா.ஜ., வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் அவர்கள் நல்லபடியாக கொண்டு சேர்த்தனர். குஜராத்துடனான பா.ஜ.,வின் பிணைப்பு பிரிக்க முடியாதது. இடைத்தேர்தலில் 8 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றிஅளித்த மக்களுக்கு நன்றி.

ஜனநாயகத்தின் முதல்பாடத்தை பீகார் உலகிற்கு கற்பித்துள்ளது. ஜனநாயகம் எவ்வாறு பலப்படுத்தப் படுகிறது என்பதை இன்று பீகார் மீண்டும் உலகிற்கு தெரிவித்துள்ளது. பீகார் இளைஞர்கள், பெண்கள் எங்களை நம்பி ஓட்டளித்துள்ளனர். இந்த இளமை ஆற்றல், எங்களை முன்பைவிட அதிகமாக உழைக்க ஊக்குவித்துள்ளது.பீகாரில் மாநிலவளர்ச்சி மற்றும் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும், நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என மீண்டும் உறுதிஅளிக்கிறேன். மக்களுக்கு என் நன்றிகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...