பிரதமர் நரேந்திரமோடி அகில இந்திய வானொலியில் ஒவ்வொருமாத இறுதி ஞாயிற்று கிழமையன்று மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு உரையாற்றுவதுவழக்கம். இதன்படி பிரதமர் மோடி இன்று பேசும்பொழுது, சமீபத்திய வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதியசந்தர்ப்பங்களுக்கான கதவுகளை திறந்துள்ளன. பலஅரசியல் கட்சிகளால் உறுதி அளிக்கப்பட்ட விவசாயிகளின் தசாப்தகால பழமையான வேண்டுகோள்கள் தற்பொழுது தீர்க்கப்பட்டு உள்ளன.
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறிய வேளாண்சீர்திருத்த சட்டங்கள், விவசாயிகளுக்கான தடைகளை உடைத்தது மட்டுமின்றி, அவர்களுக்கான புதிய உரிமைகள் மற்றும் வாய்ப்புகளையும் வழங்கிஉள்ளன.
இச்சட்டத்தின் கீழ், வேளாண் கொள்முதல் பொருட்களுக்கு 3 நாட்களுக்குள் விவசாயிகளிடம் பணம்வழங்க வேண்டியது கட்டாயம். பணம் சென்றுசேரவில்லை எனில் விவசாயி புகார் அளிக்கலாம்.
இதில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் ஒருமாதத்திற்குள் விவசாயியின் புகாரை பற்றி விசாரிக்கவேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக நடந்த ஒரு சம்பவம் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மராட்டியத்தின் துலே நகரில் ஜிதேந்திரா போய்ஜி என்ற விவசாயி இந்த புதியவேளாண் சட்டங்களை பயன்படுத்தி உள்ளார்.
அவர் மக்கா சோளம் பயிரிட்டு சரியானவிலைக்கு விற்க முடிவு செய்துள்ளார். மொத்தம் ரூ.3.32 லட்சம் அவருக்கு கொடுப்பது என ஒப்புதலானது. இதற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் முன்பணம் கொடுக்கப்பட்டது.
15 நாட்களில் அவருக்கு மீதிதொகை கிடைக்கும் என ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தொகையை பெறவில்லை. இதுபற்றி புகார் அளித்த ஒருசில நாட்களில் மீதிதொகை அவருக்கு வந்துசேர்ந்தது என கூறியுள்ளார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |