விவசாயிகள் நலனுக்காக 7 திட்டங்கள் அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர்நரேந்திர மோடி தலைமையில் இன்றுநடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின்வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ரூ.14,235.30 கோடிமதிப்பீட்டில் ஏழுதிட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1)   டிஜிட்டல் வேளாண் இயக்கம்: டிஜிட்டல்பொதுஉள்கட்டமைப்பின் அடிப்படையில், டிஜிட்டல் வேளாண் இயக்கம் விவசாயிகளின் வாழ்க்கையைமேம்படுத்த தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தும். இந்த இயக்கத்திற்கு மொத்தம் ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தஇயக்கத்தில் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மண் பரப்பு

டிஜிட்டல் பயிர் மதிப்பீடு

டிஜிட்டல் மகசூல் மாடலிங்

பயிர் கடனுக்கான இணைப்பு

செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள்

வாங்குபவர்களுடன் இணைப்பு

மொபைல் போன்களில் புதிய அறிவைக் கொண்டு வருதல்

2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர்அறிவியல்: இதற்கான மொத்தஒதுக்கீடு ரூ.3,979 கோடி. இந்த முயற்சி விவசாயிகளைபருவநிலை நெகிழ்திறனுக்குதயார்படுத்துவதுடன்  2047-ம் ஆண்டுக்குள் உணவுபாதுகாப்பை வழங்கும். இது, ஆராய்ச்சி மற்றும் கல்வி, தாவர மரபியல் வள மேலாண்மை, உணவு மற்றும் தீவனப்பயிருக்கான மரபியல் மேம்பாடு, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர் பெருக்கம், வணிகப்பயிர்களைப் பெருக்குதல், பூச்சிகள், நுண்ணுயிரிகள், மகரந்தச் சேர்க்கையாளர்கள் போன்றவற்றைப் பற்றியஆராய்ச்சி என 7 அம்சங்களைக் கொண்டதாகும்.

3. வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூகஅறிவியலை வலுப்படுத்துதல்: மொத்தம் ரூ.2,291 கோடி ஒதுக்கீட்டில் இந்த நடவடிக்கை வேளாண் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தற்போதைய சவால்களுக்கு தயார்படுத்தும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை நவீனமயமாக்குதல், புதிய கல்விக்கொள்கை 2020, டிஜிட்டல் டிபிஐ, செயற்கைநுண்ணறிவு, பெருந்தரவு போன்ற  நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்,  இயற்கைவிவசாயம் மற்றும் பருவநிலைநெகிழ்திறனை சேர்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இது செயல்படும்.

4. நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி: மொத்தம் ரூ.1,702 கோடியில், கால்நடைகள் மற்றும் பால் மூலம் விவசாயிகளின் வருமானத்தைஅதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, கால்நடை சுகாதார மேலாண்மை மற்றும் கால்நடைகல்வி,  பால் பண்ணை உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, விலங்குமரபியல் வள முகாமைத்துவம், உற்பத்தி மற்றும் மேம்பாடு, கால்நடை ஊட்டச்சத்து மற்றும் சிறிய அசைபோடும்விலங்குகள் உற்பத்திமற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

5. தோட்டக்கலையின் நிலையானவளர்ச்சி: மொத்தம் ரூ.1,129.30  கோடி செலவில் இந்த நடவடிக்கை தோட்டக்கலை தாவரங்களிலிருந்து விவசாயிகளின்வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, வெப்பமண்டல, துணைவெப்பமண்டல மற்றும்மிதவெப்ப மண்டல தோட்டக்கலை பயிர்கள், வேர், கிழங்கு, குமிழ்மற்றும் வறண்ட பயிர்கள், காய்கறி, மலர் வளர்ப்பு மற்றும் காளான் பயிர்கள், தோட்டப்பயிர்கள், மசாலா, மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களை உள்ளடக்கியது.

6. ரூ.1,202 கோடியில் வேளாண் அறிவியல் மையத்தை வலுப்படுத்துதல்

7. ரூ.1,115 கோடியில் இயற்கை வள மேலாண்மை

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...