விவசாயிகள் கணக்கில் ரூ 3.5 லட்சம் கோடி -பிரதமர் மோடி திருப்தி

”விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இதுவரை 3.5 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இது, தனிப்பட்ட முறையில் எனக்கு அபரிமிதமான திருப்தியையும், பெருமையையும் அளிக்கும் விஷயமாக உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் விவசாயிகள் கவுரவ நிதித் திட்டம் என்ற பெயரில், நாடு முழுதும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இது, ஆண்டில் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

கடந்த 2019, பிப்., 24ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, 11 கோடி விவசாய குடும்பங்களுக்கு, 3.46 லட்சம் கோடி ரூபாய், 18 தவணைகளில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 19வது தவணையாக விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் நிகழ்ச்சி பீஹாரின் பாகல்பூரில் நேற்று நடந்தது.

இதில், பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியும், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தும், பிரதமர் மோடி பேசியதாவது:

விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அர்ப்பணிக்கப்பட்ட மிகச் சிறந்த முன்முயற்சியான இந்த திட்டம் ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இதுவரை 3.5 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்திருப்பது, தனிப்பட்ட முறையில் எனக்கு அபரிமிதமான திருப்தியையும், பெருமையையும் அளிப்பதாக உள்ளது. எங்களின் இந்த முயற்சி, விவசாயிகளுக்கு மதிப்பு, வளம், புதிய பலம் ஆகியவற்றை அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில், ”இதுவரை எந்த அரசுகளும் செய்யாத ஒன்றை பிரதமர் மோடி செய்துள்ளார். விவசாயிகளின் வலியை உணர்ந்துள்ள அவர், விவசாயிகளுக்கு வழங்கியுள்ள பரிசு தான் இந்த திட்டம்,” என்றார்.

பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு அக்., – நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பீஹாரில் பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். மேடையில் நிதிஷ் குமாருடன் அவர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...