விவசாயிகள் கணக்கில் ரூ 3.5 லட்சம் கோடி -பிரதமர் மோடி திருப்தி

”விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இதுவரை 3.5 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இது, தனிப்பட்ட முறையில் எனக்கு அபரிமிதமான திருப்தியையும், பெருமையையும் அளிக்கும் விஷயமாக உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் விவசாயிகள் கவுரவ நிதித் திட்டம் என்ற பெயரில், நாடு முழுதும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இது, ஆண்டில் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

கடந்த 2019, பிப்., 24ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, 11 கோடி விவசாய குடும்பங்களுக்கு, 3.46 லட்சம் கோடி ரூபாய், 18 தவணைகளில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 19வது தவணையாக விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் நிகழ்ச்சி பீஹாரின் பாகல்பூரில் நேற்று நடந்தது.

இதில், பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியும், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தும், பிரதமர் மோடி பேசியதாவது:

விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அர்ப்பணிக்கப்பட்ட மிகச் சிறந்த முன்முயற்சியான இந்த திட்டம் ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இதுவரை 3.5 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்திருப்பது, தனிப்பட்ட முறையில் எனக்கு அபரிமிதமான திருப்தியையும், பெருமையையும் அளிப்பதாக உள்ளது. எங்களின் இந்த முயற்சி, விவசாயிகளுக்கு மதிப்பு, வளம், புதிய பலம் ஆகியவற்றை அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில், ”இதுவரை எந்த அரசுகளும் செய்யாத ஒன்றை பிரதமர் மோடி செய்துள்ளார். விவசாயிகளின் வலியை உணர்ந்துள்ள அவர், விவசாயிகளுக்கு வழங்கியுள்ள பரிசு தான் இந்த திட்டம்,” என்றார்.

பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு அக்., – நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பீஹாரில் பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். மேடையில் நிதிஷ் குமாருடன் அவர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி� ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்� ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம� ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்� ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி� ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...