`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு!’ – ரஜினி

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, `நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பின்னர் சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து 2020, டிசம்பர் 31-ம் தேதி, தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடவிருக்கிறார்.

புதிய கட்சி குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த ரஜினி, “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு.

#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல.

வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, சாதி, மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

அற்புதம்… அதிசயம்… நிகழும் !!!’’ என்று தெரிவித்திருந்தார்

இந்தநிலையில், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார் ரஜினி. அவர் கூறுகையில், “ `நான் அரசியலுக்கு வருவேன்’ என்று 2017-ம் ஆண்டு டிசம்பரிலேயே சொல்லியிருந்தேன். உள்ளாட்சித்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியைத்தொடங்கி தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொல்லியிருந்தேன்.

அதற்குப்பின்னர் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் உங்களையெல்லாம் சந்தித்து, மக்களிடம் எழுச்சி வரவேண்டும் என்று கூறினேன். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தேன். கொரோனா காலத்தில் அது முடியாமல்போனது. தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் சந்தோஷப்படுவேன்.

ஓர் அரசியல் மாற்றம் ரொம்பகட்டாயம். அது காலத்தின்தேவை. அது இப்போ இல்லைன்னா… எப்பவும் கிடையாது. எல்லாத்தையும் மாத்தணும். நான் சொன்னசொல் எப்போதும் தவறியதில்லை. நான் ஒருகருவிதான். நான் அரசியலுக்கு வருகிறேன். நான் வெற்றி பெற்றாலும், அது மக்களின் வெற்றிதான். தோல்வியடைந்தாலும் அதுவும் மக்களின் தோல்விதான். இந்தமாற்றத்துக்கு நீங்க எல்லாரும் துணையா நிக்கணும். `அண்ணாத்த’ ஷூட்டிங் இன்னும் 40 சதவிகிதம் இருக்கிறது. அதை முடித்துக் கொடுப்பது கடமை.

கட்சி தொடங்குவது ராட்சதவேலை. கட்சி தொடங்குவதற்கு அவ்வளவு வேலைகள் இருக்கின்றன. இந்தப்பாதையில் வெற்றியடைவேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. அரசியல் மாற்றம்; ஆட்சிமாற்றம் வேண்டும். இப்ப இல்லைன்னா.. எப்பவும் இல்லை’’ என்றார்.

ரஜினியின் செய்தியாளர் சந்திப்பின்போது காந்தியமக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன், மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் ரஜினி நியமித்திருக்கிறார்.

புதிய அரசியல்கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி வருகிறார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...