ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் கேட்கவில்லை – முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ்

ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்’ என மஹா., முதல்வர் பட்னவிஸ் தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவின் முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் நேற்று பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கின் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு இன்று (டிச.,06) அளித்த பேட்டி:

பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதை முதல் சந்திப்பிலேயே ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக்கொண்டார். சிவசேனா கட்சி தலைவர்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து முதல்வர் வர வேண்டும் என விரும்பினர். நாங்கள் பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதில் திட்டவட்டமாக இருந்தோம். தனிப்பட்ட முறையில் ஷிண்டேவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.

உள்துறை எப்பொழுதும் பா.ஜ., வசம் தான் இருக்கும். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நாங்கள் ஒருமித்த கருத்தை எட்டி உள்ளோம். பிரிவினைவாத அரசியலை மக்கள் நிராகரித்தனர். இலவச மின்சாரம், கல்வி போன்ற நல்ல திட்டங்களால் மஹாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தது. இது தான் பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக உருவானதற்கு காரணம். முழு மனதுடன் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.