எய்ம்ஸ் 45 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஜப்பான் நிறுவனத்திடம் கடன்பெறும் பணி 2021 மார்ச் மாதத்திற்குள் நிறைவுபெறும். அதன்பின்னர் 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதிஒதுக்கி, பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா? எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான நிலம் தமிழக அரசு இன்னும் ஒப்படைக்க வில்லை என தகவல்கள் வருகின்றன. 2 ஆண்டுகள் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாதது ஏன்? வழக்கில் இரண்டு மாதங்களாகியும் முறையாக பதில்தராதது வருத்தம் அளிக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், சுகாதார செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிடநேரிடும் என தெரிவித்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையக படுத்துவதில் சில பிரச்னைகள் உள்ளதால், காலதாமதம் ஏற்படுகிறது என தெரிவித்தார். அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கேட்கப் பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், வழக்கு விசாரணை துவங்கியபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 200 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசு கூடுதலாக கேட்ட 22 ஏக்கர் நிலமும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. நிலம் ஒப்படைப்பதற்கான ஆவணங்களையும் நவம்பர்மாதம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஜப்பான் நிறுவனத்திடம் கடன்வாங்கும் பணிகள் 2021 மார்ச் மாதத்திற்குள் நிறைவுபெறும். அதனை தொடர்ந்து 45 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என தெரிவித்தார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...