மேற்கு வங்க மக்களின் எதிர்காலத்துடன் மம்தா விளையாடுகிறார்

மிட்னாப்பூரில் அமித் ஷா தலைமையில் இன்று(டிச.,19) நடந்த கூட்டத்தில், சுவேந்து அதிகாரி, தபாசிமொண்டல், அசோகி திண்டா, சுதிப் முகர்ஜி, சாய்காட் பஞ்சா, ஷில் பத்ரா தத்தா, திபாலி பிஸ்வாஸ், சுக்ரா முண்டா, ஷியாமபதா முகர்ஜி, பிஸ்வஜித் குண்டு, பனஸ்ரீ மைடி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் ஒரு எம்.பி., மற்றும் முன்னாள் எம்.பி., ஒருவர் பா.ஜ.,வில் இணைந்தனர்.

இதனைதொடர்ந்து அமித்ஷா பேசியதாவது: மேற்குவங்க மக்களின் எதிர்காலத்துடன் மம்தா விளையாடுகிறார். மாநிலத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்றவேண்டும். மேற்கு வங்கத்திற்கு பிரதமர் அறிவித்த திட்டங்களை மம்தா தடுக்கிறார். 2020 சட்டசபை தேர்தலில், பா.ஜ., 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும். மம்தா ஆட்சியில், மாநிலத்தில் வளர்ச்சி ஏதும் நடைபெறவில்லை. ஊழல், வன்முறை தலைவிரித்தாடுகிறது. மாநில அரசின் தவறான நிர்வாகத்தால், ஏழை மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஏழைகளிடம் இருந்து கொள்ளை யடிப்பதற்கு மம்தா வெட்கப்பட வேண்டும்.

வரும் சட்ட சபை தேர்தலில், மக்கள் திரிணமுல்லை வேரோடு சாய்ப்பார்கள். திரிணமுல் குண்டர்கள் ஏவிய வன் முறையை பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம். நீங்கள் தூண்டிவிடும் வன்முறை எங்களைதான் பலப்படுத்தும். மே.வங்கத்தில் பாஜ., தொண்டர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. மாநிலத்தில் மாற்றம் ஏற்படுத்துவோம். மேற்குவங்கம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த முறை பா.ஜ.,விற்கு வழங்கும். மம்தா தலைமையில் தவறான ஆட்சி நடக்கிறது. மக்கள், மம்தாவுக்கு எதிராக உள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் திரிணமுல் காங்கிரசில் மம்தா தனித்து விடப்படுவார். தனது உறவினரை முதல்வராக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...