மேற்கு வங்க மக்களின் எதிர்காலத்துடன் மம்தா விளையாடுகிறார்

மிட்னாப்பூரில் அமித் ஷா தலைமையில் இன்று(டிச.,19) நடந்த கூட்டத்தில், சுவேந்து அதிகாரி, தபாசிமொண்டல், அசோகி திண்டா, சுதிப் முகர்ஜி, சாய்காட் பஞ்சா, ஷில் பத்ரா தத்தா, திபாலி பிஸ்வாஸ், சுக்ரா முண்டா, ஷியாமபதா முகர்ஜி, பிஸ்வஜித் குண்டு, பனஸ்ரீ மைடி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் ஒரு எம்.பி., மற்றும் முன்னாள் எம்.பி., ஒருவர் பா.ஜ.,வில் இணைந்தனர்.

இதனைதொடர்ந்து அமித்ஷா பேசியதாவது: மேற்குவங்க மக்களின் எதிர்காலத்துடன் மம்தா விளையாடுகிறார். மாநிலத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்றவேண்டும். மேற்கு வங்கத்திற்கு பிரதமர் அறிவித்த திட்டங்களை மம்தா தடுக்கிறார். 2020 சட்டசபை தேர்தலில், பா.ஜ., 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும். மம்தா ஆட்சியில், மாநிலத்தில் வளர்ச்சி ஏதும் நடைபெறவில்லை. ஊழல், வன்முறை தலைவிரித்தாடுகிறது. மாநில அரசின் தவறான நிர்வாகத்தால், ஏழை மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஏழைகளிடம் இருந்து கொள்ளை யடிப்பதற்கு மம்தா வெட்கப்பட வேண்டும்.

வரும் சட்ட சபை தேர்தலில், மக்கள் திரிணமுல்லை வேரோடு சாய்ப்பார்கள். திரிணமுல் குண்டர்கள் ஏவிய வன் முறையை பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம். நீங்கள் தூண்டிவிடும் வன்முறை எங்களைதான் பலப்படுத்தும். மே.வங்கத்தில் பாஜ., தொண்டர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. மாநிலத்தில் மாற்றம் ஏற்படுத்துவோம். மேற்குவங்கம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த முறை பா.ஜ.,விற்கு வழங்கும். மம்தா தலைமையில் தவறான ஆட்சி நடக்கிறது. மக்கள், மம்தாவுக்கு எதிராக உள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் திரிணமுல் காங்கிரசில் மம்தா தனித்து விடப்படுவார். தனது உறவினரை முதல்வராக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...